மேலும் அறிய

வறுமையும், பசியையும் விட .. மறைந்த நடிகர் விவேக் குறித்து திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் நினைவுகூர்ந்து பதிவு..

"எழில்.. ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையும் பசியை விட .. சிறந்த ஆசிரியர்கள் இருக்கமுடியாது” எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார் மருத்துவர் எழிலன்.

2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளரான மருத்துவர் எழிலன் நாகநாதன் நடிகர் விவேக்கின் மிக வலிமையான வரிகளை நினைவுகூர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

மருத்துவர் எழிலன் தனது பதிவில், ”நான் அப்போது எழும்பூர் தொன்போஸ்கொ பள்ளியில் 12 வகுப்பு படித்து கொண்டுஇருந்தேன்.நான் பள்ளியின் கலைப்பிரிவின் தலைவர்.நாடக போட்டிக்காக திரு விவேக் அவர்களை தலைமை தாங்க அழைத்திருந்தேன்‌. திரைத்துறையில் அவர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.ஆனால் மூன்று மணி நேரம் மாணவர்களின் நாடகங்களை கண்டு அவர்களின் திறமையை உற்சாகப்படுத்தி பரிசுகளை வழங்கினார். அவரின் எளிமையை கண்டு வியந்தேன். அவர் எனக்கு சொன்ன வரிகள் இன்னும் எனக்கு கேட்டு கொண்டே இருக்கிறது. "எழில் ...ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையும் பசியை விட ... சிறந்த ஆசிரியர்கள் இருக்க முடியாது” எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
 
<div class="fb-post" data-href="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040" class="fb-xfbml-parse-ignore"><p>நான் அப்போது எழும்பூர் தொன்போஸ்கொ பள்ளியில் 12 வகுப்பு படித்து கொண்டுஇருந்தேன்.நான் பள்ளியின் கலைப்பிரிவின் தலைவர்.நாடக...</p>Posted by <a href="#" role="button">Ezhilan Naganathan</a> on&nbsp;<a href="https://www.facebook.com/ezhilan.naganathan/posts/10218348473159040">Friday, April 16, 2021</a></blockquote></div>

இதேவகையில், "எனக்கு காரியம் செய்வார் என நினைத்த விவேக்கிற்கு இப்படி ஆகிவிட்டேதே" என அவரது தமிழ் ஆசிரியர் சாலமன் பாப்பையா ABP நாடு இணையதளத்திற்கு கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் இருந்த சாலமன் பாப்பையாவிடம் விவேக் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என நாம் தொலைபேசியில் கேட்ட போதே, அவரின் குரல் உடைந்துவிட்டது. அவரை தேற்றி பேச வைத்தோம். ‛"சின்ன கலைவாணர் விவேக் ஒரு சிறந்த நடிகர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில மூன்றாண்டுகள் படித்தவர். அப்படி படிக்கும்போது ஓர் வருசம் என்னிடம் படித்தார். இந்த தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் மன இருளை போக்கியதில் அவருக்கு பெரும்பங்குண்டு. குறுகிய காலத்தில் சீர்திருத்த அலைகளை மக்கள் மத்தியில் பரப்புனவரு. பகுத்தறிவு இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து’’ என, பாப்பையா சொல்லும்போதே உடைந்த அவரது குரல் பெருமையில் திளைக்கிறது.

‛‛அவரு யாரையும் புண்படுத்திட மாட்டாருங்க,  பிறருடைய மனம் வருந்தாமல் அறிவார்ந்த கருத்துகளை சொல்றதுல அவருக்கு நிகர் யாரும் இல்லீங்க. என்.எஸ்.கே.க்கு பின்னாடி சின்னக்கலைவாணர் அப்படிங்கிற பட்டம் அவருக்கு அவ்வளவு பொருந்திபோனது. எல்லா மனுஷங்ககிட்டயும் அன்பா பழகுவாரு. எங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். என்னுடைய ஸ்டுடண்ட்  அல்லவா, அதனால என் மீது மிகுந்த அன்பும், பிரியமும் வச்சுருந்தாரு,’’ என்று சொல்லி அமைதியாகிறார். சில நொடி இடைவெளிக்குபிறகு, ‛‛எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது தொலைபேசியில் வந்த முதல் வாழ்த்து விவேக்கோடதுதான். விவேக் இருந்து எங்களுக்குக்கெல்லாம் காரியம் செய்வாருன்னு நெனச்சன். ஆனா, இந்த சின்ன வயதுலயே அவர் காலமானதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,’’ என சொல்லும்போதே உடைந்து அழுதுவிட்டார் பாப்பையா.

‛‛விவேக் மனசுல ஏதோ சோகம் இருந்துருக்குங்க. தனது மகனின் இழப்பை அவரால தாங்கிக்கவே முடியல . அந்த தக்கத்தை தாங்கமுடியாமதான் அவன தேடி அங்கேயோ போய்ட்டாரோ என்னவோ. அவரு இழப்பு திரைத்துறைக்கு மட்டுமில்லைங்க, பகுத்தறிவு இயக்கத்திற்கு நல்ல நண்பர்களுக்கு, பழக்கத்திற்குகான, இந்த தமிழகத்திற்கே பேரிழப்பு. இறை அவரது ஆன்மாவிற்கு அமைதி தரவேண்டும்" என துக்கம் தனது குரலை பேசி முடித்துக்கொண்டார் பாப்பையா. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனையாளர்களுக்கு 'பசுமை சாம்பியன்' விருதுகள்: ரூ.1 லட்சம் பரிசு!
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget