மேலும் அறிய

பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது - அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அட்வைஸ்

இமேஜை கெடுக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. கிடைத்ததை வைத்து நாம் மக்களுக்கு நன்மை செய்து, நல்ல முறையில் நடந்து கொண்டால் நமக்கு சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.

பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது, இமேஜை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது கடலூரில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அட்வைஸ் கொடுத்துள்ளார்
 
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ., ஐயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரை சரவணன், இளபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி குறித்து கட்சி நிர்வாகிகள் கருத்தை கேட்டறிந்து பின்னர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மை துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் பேசினார்.
 

பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது -  அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அட்வைஸ்
 
”கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், 1 மாநகராட்சி ஆகியவற்றில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான உழைப்பில் கிடைத்த வெற்றி. 8 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இந்த வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் புவனகிரி,சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை நாம் இழந்துவிட்டோம். இதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. தேர்தல் என்றால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்,. அப்போது தான் வெற்றி பெற முடியும்.
 

பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது -  அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அட்வைஸ்
 
 
கட்சி நிர்வாகியாகிய உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பொறுப்பு நிச்சயம் கிடைக்கும். நான் யாரையும் கழுத்து அறுக்க மாட்டேன். கோபம் வந்தால் திட்டுவேன். நிச்சயம் உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். நம் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையில் காட்சியினர் தலையீடு இல்லை, யாரையும் மிரட்டவும் இல்லை அதனால்தான் இந்த வெற்றி நமக்கு உள்ளாட்சியில் கிடைத்துள்ளது. வெற்றி பெற்றுள்ளவர்கள் பதவி கிடைத்து விட்டது என்று திமிராக இருக்கக்கூடாது, இமேஜை கெடுக்கும் வகையில் நடக்கக் கொள்ள கூடாது. கிடைத்ததை வைத்து நாம் மக்களுக்கு நன்மை செய்து, நல்ல முறையில் நடந்து கொண்டால் நமக்கு சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.
 

பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது -  அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அட்வைஸ்
 
 
மக்கள் மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் .பொறுத்தார் பூமி ஆள்வார். தமிழக முதல்வரின் பிறந்த நாளை கிராமம் கிராமமாக அனைத்து கிளைகளிலும், பேரூர்,நகரத் திலும் விமரிசையாக கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்” என கூறினார்.
 
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவித்தும், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னாள் எம்.எல்.ஏ., மருதூர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget