மேலும் அறிய

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் முதலாமாண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பு கட்சியினர், தொண்டர்கள், மக்கள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

அன்னதானம் செய்வதில்தான் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா சந்தோஷமடையும் என தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் குருபூஜை விழா முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்த் குருபூஜை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். கேப்டன் முதலாமாண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பு கட்சியினர், தொண்டர்கள், மக்கள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன். காவல்துறை மிகச்சிறப்பாக அவர்களின் பணியை செய்திருக்கிறார்கள். அவருகளுக்கு என் நன்றி. காவல்துறை என்றாலே அதற்கு அடையாளமாக விளங்கியது கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். காலையில் 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மவுன அஞ்சலி செலுத்தியிருக்கிறேன். அதற்கு காரணம் கேப்டன் நம்மை விட்டு பிரிந்தது சரியாக 6.10 மணிக்கு. அதனால் இந்த 12 மணிநேரம் தலைவருக்கு மவுன அஞ்சலி செலுத்தி அவரின் ஆத்மா சாந்தி அடைந்து மக்களுக்காக வாழ்ந்தார். மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்களுக்காகவே வாழ்வார். மனிதராய் பிறந்து புனிதராய் வாழ்ந்து இன்று தெய்வமாக ஒட்டுமொத்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனித ஆத்மாவாக கேப்டன் இருக்காங்க. 

நிச்சயம் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் எங்கள் நாளை தொடங்குகிறோம். வரும் காலம் கேப்டன் ஆசிர்வாதத்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும். 

முறையாக காவல்துறையை அணுகி அமைதி பேரணிக்கு பல முறை அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு தவறி நாங்கள் நடக்கமாட்டோம். அப்படித்தான் கேப்டன் எங்களை வழிநடத்தி உள்ளார். சட்டம் ஒழுங்குக்கு எந்த ஒரு சீர் முறைகேடும் இல்லாமல் பேரணியை நடத்தியுள்ளோம். அதற்காக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

என்றைக்கும் கேப்டனுக்கு விசுவாசமாக இருப்போம் எனவும் கேப்டனின் கனவும் கொள்கையும் நினைவாக உறுதிமொழி ஏற்றுள்ளோம். கேப்டனின் மறைவின் போது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வந்தார். உதயநிதி வந்தார். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அரசு மரியாதையுடன் இறுதி மரியாதையை செய்தோம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுகொண்டதால் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். 

பேரணிக்கு அவர்களே அனுமதி கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் நாங்களே பேரணி நடத்தினோம். திமுக, அதிமுக தலைவர்களுக்கு அமைதி பேரணி செல்ல அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால் இந்த அமைதி பேரணிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை. அரசாங்கமே அனுமதி கொடுத்திருந்தால் இந்த அரசாங்கத்தை மக்கள் இன்னமுமே  கொண்டாடியிருப்பார்கள். கூட்டணியில் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா? இல்லை மக்கள் கூட்டம் அதிகரித்துவிடும் என்பதால் தரவில்லையா என்று தெரியவில்லை. இனி வரும் காலமும் அன்னதானம் தொடரும். இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை அன்னதானம் தொடரும். அதில்தான் கேப்டனின் ஆன்மா இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vedanta: வேதாந்தா நிறுவன சேர்மேனின் மகன் மரணம் - அக்னிவேஷ் அகர்வாலின் (49) இறப்புக்கான காரணம்..
Vedanta: வேதாந்தா நிறுவன சேர்மேனின் மகன் மரணம் - அக்னிவேஷ் அகர்வாலின் (49) இறப்புக்கான காரணம்..
Tata Harrier Safari: ரூ.13 லட்சத்த்துக்கு 7 சீட்டரை இறக்கிய டாடா.. ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - முழு விவரங்கள்
Tata Harrier Safari: ரூ.13 லட்சத்த்துக்கு 7 சீட்டரை இறக்கிய டாடா.. ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - முழு விவரங்கள்
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vedanta: வேதாந்தா நிறுவன சேர்மேனின் மகன் மரணம் - அக்னிவேஷ் அகர்வாலின் (49) இறப்புக்கான காரணம்..
Vedanta: வேதாந்தா நிறுவன சேர்மேனின் மகன் மரணம் - அக்னிவேஷ் அகர்வாலின் (49) இறப்புக்கான காரணம்..
Tata Harrier Safari: ரூ.13 லட்சத்த்துக்கு 7 சீட்டரை இறக்கிய டாடா.. ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - முழு விவரங்கள்
Tata Harrier Safari: ரூ.13 லட்சத்த்துக்கு 7 சீட்டரை இறக்கிய டாடா.. ஹாரியர், சஃபாரி பெட்ரோல் எடிஷன் - முழு விவரங்கள்
முதலில் 10 மகள்கள்.. 11வதாக பிறந்த ஆண் குழந்தை.. கொண்டாட்டத்தில் தம்பதியினர்!
முதலில் 10 மகள்கள்.. 11வதாக பிறந்த ஆண் குழந்தை.. கொண்டாட்டத்தில் தம்பதியினர்!
Jana Nayagan:
Jana Nayagan: "நினைத்தது நடந்தது”.. விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. சோகத்தில் தமிழ் சினிமா!
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Venezuela Russia America: வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
Embed widget