மேலும் அறிய

Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

டிட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்கிவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 மாவட்டங்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிட்வா புயல் எதிரொலியால் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, 3 மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை உட்பட தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை நெருங்கிய டிட்வா

வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

டிட்வா புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 90 கி.மீ, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 90 கி.மீ, யாழ்ப்பாணத்தில்(இலங்கை) இருந்து வட-வடகிழக்கில் 130 கி.மீ, புதுச்சேரியில் இருந்து தென்-தென்கிழக்கில் 160 கி.மீ மற்றும் சென்னைக்கு தெற்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 3 மாவட்டங்களில் அவசர உதவிக்காக மக்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3 மாவட்டங்களில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

டிட்வா புயல் எதிரொலியாக, திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ள நிலையில், அந்த மாவட்டத்திற்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல், நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அவசர கால கட்டுப்பாட்டு எண் 043651077, வாட்ஸ் அப் எண் 8110005558, கட்டணமில்லா எண் 18002334233 ஆகிய எண்களை பொதுமக்கள் தொர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அங்கும் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவசர கால கட்டுப்பாட்டு எண் 1077 மற்றும் 04364-222588 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு செல்லும் முன்பு, பயணிகள் விமானங்களின் நிலவரத்தை இணையதளத்தில் சரிபார்த்தக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்பட பல நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் 011-69329333, 011-69329999 ஆகிய எண்களில் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Embed widget