மேலும் அறிய

கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!

கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால், தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும். 

அரபிக்கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் நிலவுவதால், தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி , வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில்,  கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, 


கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!


மின்னல், இடியிலிருந்து தற்காத்துக் கொள்ள கட்டாயம் செய்ய வேண்டியவை : 

1. கனமழை காலத்தில் மின்னல், இடி இடிக்கும் போது வெட்டவெளியில் உயரமான இடங்களில் பயணிப்பது, நடப்பதை தவிர்க்கலாம். அப்படி அந்த இடங்களில் இருந்தால் கைகளால் கால்களை இறுக்க அணைத்து தரையில் அமர்ந்து கொள்வது நல்லது. இதனால் மின்சாரம் நம் உடல் வழியாக செல்வதை தடுக்க முடியும். 

2. மின்னல் வெட்டும்போது வீட்டில் சொல்வது போல் செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்கலாம். 

3. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்குபோது இடி, மின்னலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். 

4. மின்னல், இடி இடிக்கும் போது பொதுவெளியில் இருக்கும் மரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கட்டாமல் தவிர்க்கலாம். 

5. உங்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் அதிகப்படியான மின்னல் ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பு அளிக்கும். 


கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!

செய்யக்கூடாதவை : 

1. மின்னல், இடி இடிக்கும் போது வீடுகளில் உள்ள உலோக பொருட்களுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

2. மின்னல், இடி இடிக்கும் போது குடையை பயன்படுத்த கூடாது என்பது முக்கியமான ஒன்று. 

3. ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவேண்டாம். 

4. இரும்பு கம்பியினால் உருவாக்கப்பட்ட வேலி, கைப்பிடி போன்றவை அருகில் செல்வதை தவிர்க்கலாம். 

5. மிக முக்கியமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 


மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற அவசர கால தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget