மேலும் அறிய

Operation Kanthuvatti: ’கந்துவட்டிக்காரர்களுக்கு செக்...’ டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

கந்து வட்டி கொடுமையை ஒழிக்கும் வகையில், கந்துவட்டி தொடர்பான அனைத்து புகார்களையும் உடனடியாக விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், நேற்று (ஜூன்.07) கந்து வட்டி கொடுமையால் கடலூரில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கந்துவட்டியால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பெண் ஒருவர் முன்னதாகக் கைது செய்யப்பட்டார்.

சைலேந்திரபாபு சுற்றறிக்கை

இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், ”கந்துவட்டி கொடுமையைத் தடுக்கும் வகையில் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அனைவரும் ‘அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003’ இன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபரேஷன் கந்துவட்டி

அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள்.

இந்த வழக்குகள் தொடர்பான கையொப்பமிடப்பட்ட அல்லது வெற்று காசோலைகள் மற்றும் பிற இணைக்கப்பட்ட ஆவணங்கள்/மதிப்புமிக்க பத்திரங்கள் உள்பட அனைத்து குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களையும் கைப்பற்றவும்.

இந்த சிறப்பு இயக்கத்துக்கு ’ஆபரேஷன் கந்துவட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் முன்னுதாரணமாக பணியாற்றும் அதிகாரிகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த காவலர்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு, துறிஞ்சிக் கொல்லையை சேர்ந்த முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). உளுந்தூர்பேட்டை 10ஆவது பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், ஜூன் 1ஆம் தேதி கடலூர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.

இது பற்றித் தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மயங்கிக் கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கந்துவட்டிக் கொடுமை

இதில் குடும்ப செலவுக்காக வட்டிக்கு பணம் தரும் பெண் ஒருவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும், அந்தப் பணத்தை திருப்பி செலுத்தியும் அந்தப் பெண் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், இதனால் மன வேதனை அடைந்த செல்வ குமார் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

முதலிலி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வகுமாரின் உடல் நிலை மோசமான நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், காவலர்கள் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget