![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Michaung: மிரட்டும் மிக்ஜாம்! எல்லாருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுங்க - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அட்வைஸ்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
![Cyclone Michaung: மிரட்டும் மிக்ஜாம்! எல்லாருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுங்க - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அட்வைஸ் cyclone michaung tamilnadu government advise private company work from home Cyclone Michaung: மிரட்டும் மிக்ஜாம்! எல்லாருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுங்க - தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அட்வைஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/3c30d051cd7e769a45a54e95296075201701616666646102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மிக்ஜாம் புயல்:
“ மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை:
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம்மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்:
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Cyclone Michaung LIVE: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 8.30 மணிவரைக்கும் அதிகனமைழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேலும் படிக்க: Chennai Metro Rail: மிரட்டும் மிக்ஜாம் புயல்! நாளை மெட்ரோ ரயில் சேவை இயங்குமா? விளக்கம் தந்த மெட்ரோ ரயில் நிர்வாகம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)