மேலும் அறிய

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தம் பழைய காலனியைச் சேர்ந்தவர் செ.சாமிக்கண்ணு மகன் முருகேசன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணகி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனால், அவர்கள் இருவரையும் பெண்ணின் தரப்பினர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து 2003 ஆம் ஆண்டு அவர்கள்து உடல்களை எரித்தனர். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ஆணவக் கொலை வழக்கினை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பெண்ணின் உறவினர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இருவர் உள்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் கண்ணகியின் சகோதரருக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று முருகேசனின் தம்பி பழனிவேல் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டார் எனவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சுய நினைவு இழந்து புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரார் எனவும் அவரது உறவினர்கள். இது குறித்து, சாமிக்கண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவில் கூறி இருந்ததாவது,  தங்களது குப்பநத்தம் கிராமத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தங்கள் ஊரில் அய்யாசாமி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் இதனை ஏற்றுகொள்ள முடியாத நபர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவரை அவரது கடமைகளை செய்ய விடாமல் தொடர்ந்து அவரை தடுத்து வந்தனர். இந்த நிலையில் இதற்கு முன்னதாக நடந்து முடிந்த கண்ணகி முருகேசன் வழக்கில் சம்பத்தப்பட்ட நபர்கள் மற்றும் விருத்தாச்சலம் காவல் துறையினர் தூண்டுதலின் பேரில் தனது மகன் பழனிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உணவு உண்ண கடைக்கு சென்றிருந்த பொழுது அவரை மர்ம நபர்கள் தலையில் வெட்டி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 
 
கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு
 
முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இத்தாக்குதல் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சம்பவம் நடைபெற்ற நாளில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டோம். அப்போது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய காவல் துறையினர் தற்போது ஒருதரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பு 2021 ஆம் ஆண்டில் தன்னையும், மனைவி சின்னப்பிள்ளையும் தாக்கினர். அதே ஆண்டில் டிசம்பரில் மற்றொரு மகன் சுந்தரபாண்டியனும் தாக்கப்பட்டார். மூன்றாவது முறையாக மற்றொரு மகனை தாக்கி உள்ளனர். இந்த சம்பவங்களால் பயந்து போய் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறோம். எனவே, எங்கள் குடும்பத்தினை தொடர்ந்து தாக்கி வரும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும் பின்னர் அவர்கள் கூறுகையில் இது போன்று தங்களது கிராமத்தில் ஒரு சில நபர்கள் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்களால் தங்களது சொந்த கிராமத்திலேயே நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர், மேலும் இவ்வாறு தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இந்த புகார் குறித்து மனு அளிக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
சென்னை மக்களுக்கு பறந்த ஹாப்பி நியூஸ்! அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் மாறப்போகும் மாபெரும் காட்சி!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget