மேலும் அறிய

DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி

DMK Alliance: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

DMK Alliance: தமிழ்நாட்டில் அனுதினமும் தலித் கொடுமைகள் நிகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

பெரியார் நினைவு தினம்:

பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, அவரது உருவசிலைக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

”தொடரும் ஆணவக் கொலைகள்”

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை  பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால், அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் கைவிடப்பட்டு உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் தூக்கிபிடித்திருக்கிற சமூக ஒற்றுமை, சாதிகளற்ற சமூகம், சமூக ஒடுக்குமுறை மற்றும் பெண் அடிமைத்தனத்தை முறியடிக்கும் உயர்ந்த நோக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூக்கி பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த பாதையிலேயே தமிழகம் பயணிக்க வேண்டும் என அரைகூவி அழைக்கிறது.  தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கவும், செயல்படுத்தவும் அனைவரும் திரண்டு வரவேண்டுமெனெ கேட்டுக் கொள்கிறேன்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஷாக்:

கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே, இது திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாமும் மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றும் அரசு என சூளுரைத்து வருகிறது. ஆனால், ஆணவக் கொலைகள், கொலை, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவை திமுக ஆட்சியில் அதிகரித்து, சட்ட-ஒழுங்கு சிர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் ஓயவில்லை, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டினை, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே பேசியுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலையும் திமுக கூட்டணி:

ஆம்ஸ்ட்ராங்க கொலையின்போது, அரசியல் கட்சி தலைவர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினர். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளால், திமுக மற்று விசிக கூட்டணியிலும் குழப்பாமான சூழல் ஏற்பட்டது. அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக 25 தொகுதிகளை கேட்கும் என, அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் வன்னியரசு பேசியதும் பெரும் பேசுபொருளாகி, திமுகவை அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில் தான், திமுக ஆட்சியில் ஆணவக்கொலைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் இந்த அதிரடி கருத்துகள், திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
Russia Fuel Crisis: ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
Russia Fuel Crisis: ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 29-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 29-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
Embed widget