சிதம்பரம் மக்களுக்கு அடித்த ஜாக்பாட் ! 90 சதவீத பணிகள் நிறைவு ... என்ன திட்டம் தெரியுமா?
சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணாமலை நகருக்கு செல்லும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்.

கடலூர்: சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணாமலை நகருக்கு செல்லும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நடராசர் கோயில் (Nataraja Temple, Chidambaram) அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.
சிதம்பரத்தில் வாகனங்கள் அதிகரிப்பு - தொடரும் போக்குவரத்து நெரிசல்
சிதம்பரம் நகரில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில், வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக உள்ளது.
அதிலும் வார விடுமுறை நாட்களில் வெளியூரில் இருந்து பல்லாயிரகணக்கானோர், கோவிலுக்கு வருவதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, தேரோடும் நான்கு வீதிகள், வடக்கு மெயின்ரோடு, கஞ்சித்தொட்டி, சபாநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மட்டுமின்றி, அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.
புறவழிச் சாலை அமைக்கும் பணி தீவிரம்
பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல் காணப்படுகின்றது. இதனை தவிர்க்க வெளியூரில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வராமல் செல்லும் வகையில் தில்லையம்மன் ஓடையை ஒட்டி புறவழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுப் பணித்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 36 கோடி ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு ஜூன் மாதம், பணிகள் துவங்கப்பட்டது.
சிதம்பரம் சோழன் டெப்போ அருகே உள்ள தில்லையம்மன் ஓடையின் இடது பக்கத்தில் சாலை துவங்கி, சிதம்பரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்று, ரயில்வே மேம்பாலம் வழியாக அண்ணாமலை நகர் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது வாய்க்காலின் ஒரு கரையில், முழுவதும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் முழுவதும் முடிவு பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தின் பின்புறம் மட்டும், சில இடங்களில் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. சாலை போடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.





















