மேலும் அறிய
துணை முதல்வர் குறித்து விமர்சனம்; நடிகர் குணால் கம்ரா வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்
மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா வானூர் கோர்ட்டில் ஆஜகி ஜாமீன் பெற்றார்

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
Source : ABP NADU
விழுப்புரம்: மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா வானூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை யூடியூப் சேனலில் விமர்சனம் செய்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா இன்று வானூர் நடுவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் - குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் நயா பாரத் என்ற ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, குணால் கம்ரா மீதும், அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, குணால் கம்ரா நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களால் மிரட்டப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர் என்று வாதிட்டார். மேலும், மனுதாரர் குணால் கம்ரா தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார். இது போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் விழுப்புரம் மாவட்டம் வானூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமீனில் முன்ஜாமீன் பெறலாம். இந்த மனு மீது மும்பை கார் போலீசார் பதில் தர வேண்டும் என்று உத்தர விட்டு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில் குணால் கம்ரா காலை காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் நீதிபதி பிரித்தி முன்னிலையில் ஆஜரானார். அப்போது விசாரித்த நீதிபதி பிரித்தி இரு நபர்கள் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார் அதன்பேரில் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபி வயது 40 அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 35 ஆகிய இருவரும் ஜாமீன் அளித்தனர் மேலும் சொந்த ஜாமீனாக ரூபாய் 10 ஆயிரம் செலுத்த வேண்டும் உத்தரவிட்டதின் பேரில் ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை வரும் 7 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு





















