மேலும் அறிய

கடலூரில் விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரம்: மாணவர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிரிழந்த கல்லூரி மாணவன் -கூடுதல் பேருந்து வசதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலை, மாலை என இருவேளை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி  கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து கடலூர் பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று உள்ளனர். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், நாய் மீது ஏற்றாமல் இருக்க ஆட்டோவை வளைத்த போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த ஆட்டோவில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மனக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த  மூன்றாமாண்டு மாணவன் தமிழ்ச்செல்வன் என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழப்புக்கு அரசு இழப்பீடு இரண்டு லட்ச ரூபாய் தொகையை அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மீண்டும் தொடங்கியது.

கடலூரில் விபத்தில் மாணவர் உயிரிழந்த விவகாரம்: மாணவர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு
 
கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை பத்தாது எனவும் கூடுதல் இழப்பீடு கேட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திடீரென மாணவர்கள் கடற்கரைச் சாலையில் இருந்து நடை பயணம் மேற்கொள்ள தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்திய நிலையில் காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது இந்த வழித்தடத்தில் பேருந்துகள் சரி வர இயக்கப்படாதால்தான் மாணவ, மாணவிகள் ஆட்டோவில் சென்று விபத்தில் சிக்குவதாகவும், கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை வைத்தனர். கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவ, மாணவிகள் காவல்துறையின் எதிர்ப்பையும் மீறி நடை பயணமாக வந்து சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget