மேலும் அறிய

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!

சாதாரண மக்கள் கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்தாலும், அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பது என்பதே அரிது. அதிலும் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அதனினும் அரிது. அப்படி உதவி செய்த அதிகாரிகளை காலப்போக்கில் மக்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கோவை மாவட்டத்தில் உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், ஆட்சியரின் பெயரை தங்களது பகுதிக்கு சூட்டி, கிராம மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.

முதலமைச்சரின் தனிச்செயலாளர் உமாநாத் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த போது, பட்டா வழங்கியதால் அவரது பெயரை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு சூட்டியுள்ளனர்.

 
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு அரசியல் தலைவர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் பெயர் இருப்பதை பார்த்திருப்போம். கோவை அருகே ஒரு பகுதி தற்போது பணியில் உள்ள ஒரு அரசு அதிகாரியின் பெயரை தாங்கியுள்ளது என்றால், அது உமாநாத் பெயர் மட்டும் தான்.

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
 
சாதாரண மக்கள் கோரிக்கை மனுக்களோடு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்தாலும், அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பது என்பதே அரிது. அதிலும் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது அதனினும் அரிது. அப்படி உதவி செய்த அதிகாரிகளை காலப்போக்கில் மக்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கோவை மாவட்டத்தில் உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், ஆட்சியரின் பெயரை தங்களது பகுதிக்கு சூட்டி, கிராம மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
 
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ளது விராலிக்காடு பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டிற்கு முன்பு வரை இப்பகுதி மக்களுக்கு பட்டா இருக்கவில்லை. 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்கள் பட்டா கேட்டு அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
 
கோரிக்கை மனு, போராட்டம் என பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்ட நிலையிலும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2011 ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த உமாநாத்திடம், விராலிக்காடு பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
 
இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் உமாநாத் 2 ஏக்கரில் குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது. அரசு அதிகாரியாக தனது பணியை ஆட்சியர் உமாநாத் செய்திருந்தாலும், உதவி செய்த ஆட்சியரை காலந்தோறும் நினைவு கூறும் வகையில், அப்பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர்சூட்டி அப்பகுதி மக்கள் நன்றிக்கடன் செலுத்தி வருகின்றனர்.

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
 
2011 க்கு பிறகு பணி மாறுதல் காரணமாக உமாநாத் பல்வேறு பொறுப்புகளுக்கு சென்ற நிலையிலும், கடந்த பத்து ஆண்டுகளாக அப்பகுதி கலெக்டர் உமாநாத் காலனி என்ற பெயரை தாங்கி வருகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், "30 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டு வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கிய கலெக்டருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இப்பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என பெயர் வைத்தோம்.
 

Umanath IAS: முதல்வரின் தனிச்செயலர் உமாநாத் பெயரில் குடியிருப்பு பகுதி இருப்பது தெரியுமா? பின்னணியில் சுவாரஸ்யம்!
தற்போது முதலமைச்சரின் தனிச்செயலாளர்களில் ஒருவராக உமாநாத் நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு உதவி செய்தது போல தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தனர்.
 
முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகள் நியமனம் பரவலாக பாராட்டை பெற்று வரும் நிலையில், தங்களது ஊருக்கு உதவி செய்த உமாநாத் முக்கிய பொறுப்பிற்கு வந்திருப்பது கலெக்டர் உமாநாத் காலனி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget