திருச்சி மக்களுக்கு தீர்ந்தது தலைவலி ...! மிக பிரமாண்டமாக உருவாகும் பேருந்து முனையம்.... விரைவில் திறப்பு விழா !
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 9ம் தேதி முதல்வர் திறந்துவைக்க உள்ளார்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் விரைவில் முதல்வர் திறக்கப்பட உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்து வருகிறார்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் ஒன்று திருச்சி. தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். இதனால் மாநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. திருச்சி மாநகர் பகுதியில் அதிகரிக்கும் மக்கள்தொகை பெருக்கம், அதிக அளவில் வாகன பயன்பாடுகள் காரணமாகவும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்!
இதனால், நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்க்கு முடிவு கட்டும் வகையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.900 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து முனையத்தோடு, கனரக சரக்கு வாகன முனையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி அடிக்கல் நாட்டி னார். இதை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. அமைச்சர் கே.என்.நேரு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது. வருகின்ற 9ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்.
குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம்
இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதில் பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மேலும் இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்ந்து அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இத்தகைய பேருந்து திறப்பதன் மூலம் அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






















