மேலும் அறிய

மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

தாமிரபரணி -வைப்பாறு நதி இணைப்பு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம், கயத்தார், புதூர், விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே புரட்டாசி ராபி பருவத்தில் சிறுதானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், வத்தல், வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை சீற்றம் அல்லது வறட்சி என ஏதாவது ஒரு கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவித்து வந்தனர். அதேபோல் இந்தாண்டும் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மனம் தளராத விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்தனர். தவிர விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதி நிலங்கள் கரிசல் மண் சார்ந்தவை என்பதால் இங்கு விளையும் முண்டு வத்தல் காரத்தன்மையும், அதிக விதையும், சுவையும் கொண்டதாகும் சந்தையில் விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு நல்ல மவுசுண்டு.


மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், "தற்போது குண்டு வத்தல் வரத்து அதிகமாக உள்ளதால் இருப்பு வைக்க குடோன் வசதி இல்லாததால் அவ்வப்போது விலைக்கு விற்று விடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு ஓரளவு விளைச்சலை முண்டு வத்தல் பெற்றுள்ளது. அதன் செலவும் பன்மடங்காகிறது.


மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

தவிர சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், ஆர்எஸ் மங்கலம் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உறுதுணையாக இருந்தார். அதே போல் விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் விளைவிக்கபடும் முண்டு வத்தலுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவும், கிராமங்கள் தோறும் விளைபொருட்கள் இருப்பு வைக்க குடோன் கட்டித்தரவும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து இருந்தார்” என்று கூறினார்.


மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விரிவாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க ரூ. 30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விளாத்திகுளம், புதூர் விவசாயிகள் வத்தலை சேமிக்க குளிர்பதன குடோன் தேவை என்பதையும் பதிவு செய்து இருந்தது ஏபிபி நாடு. இந்நிலையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குண்டு வத்தலுக்கு புவிசார் குறீயிடு பெற நிதி ஒதுக்கீடு, உணவு பதப்படுத்துதலில் ஈடுபடும் தனியார் தொழில் முனைவோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகை, மானியம் வழங்கும் உணவு பதப்படுத்துதல் கொள்கை மறுசீரமைக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “வேளாண் நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் மையம் அமைக்கப்படும் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் கடந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை 2020 - 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் விளாத்திகுளத்தில் மிளகாய் மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. தற்போதும் மிளகாய் மையம் அறிவித்திருப்பது ஏட்டளவில் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். தவிர பனைமரங்கள் பாதுகாக்க ரூஇரண்டு கோடியும், பனைமரங்கள் ஆராய்ச்சிக்கு ரூ 15 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்து உள்ளது வரவேற்க்கத்தக்கது. தவிர கடந்த அரசில் விதை மானியம், உரம் மானியம், மருந்து மானியம், உழவு மானியம் என விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு விடுவிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அம்மானியத்தை நிறுத்திவிட்டு இடுபொருளாக வழங்குகிறது. இடுபொருட்கள் பயன் இன்றி உள்ளது. பழைய அரசு வழங்கியபடி உழவு, விதை, மருந்து, இவற்றுக்கு மானியத்தை பணமாக வழங்க வேண்டும்.


மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்

தவிர பட்ஜெட்டில் சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு சீமையாக்குவோம் என அரசு கூறியுள்ளது. சீமைகருவேல மரங்கள் அகற்ற ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் தமிழக அரசு வழங்குகிறது. ஏக்கருக்கு ரூ 15 ஆயிரம் செலவாகிறது. இதனால் அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசே விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி தர வேண்டும். கலைஞரின் ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.250 கோடி 2504 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. எண்ணெய்வித்துக்கள் (சூரியகாந்தி, கடலை) ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது. சூரியகாந்திக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் விளையும் மிளகாய் வத்தல், முருங்கைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க ரூபாய் முப்பது இலட்சம் ஒதுக்கீடு செய்ததோடு இல்லாமல் விரைந்து பெற்றுத்தர வேண்டும். ஊரணிகள், குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் தாமிரபரணி -வைப்பாறு நதி இணைப்பு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget