மேலும் அறிய

செல்போனை தொட்டதால் காணாமல் போன 99,000 ரூபாய்! மோசடி வலைக்குள் சிக்கிய சென்னைவாசி! வார்னிங் கொடுத்த சென்னை காவல் துறையினர்

போலியாக வரும் போக்குவரத்து சலான் URL Linkகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தல்

Link - யை தொட்டதால் காணமால் போன பணம்

சென்னை தரமணியில் சக்திவேல் ( வயது 32 ) என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலின் கைப்பேசி எண்ணிற்கு அவரது இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் , அதில் குறிப்பிட்டிருந்த குறுஞ்செய்தியில் இருந்த இணையதள இணைப்பிற்குள் (URL Link) சென்று விவரம் அறிந்து கொள்ளுங்கள் என்று வந்த குறுஞ் செய்தியை உண்மை என நம்பிய சக்திவேல் அந்த இணையதள இணைப்பை தொட்ட போது , அவருடைய கைப்பேசி Hack செய்யப்பட்டு செயலிழந்து விட்டதது.

அதனைத் தொடர்ந்து சக்திவேல் கைப்பேசிக்கு பல OTP எண்கள் வந்ததென்றும் , அனைத்து குறுஞ் செய்திகளையும் கைப்பேசியிலிருந்து அழித்து விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மனுதாரரின் Kotak வங்கி கணக்கிலிருந்த பணத்திலிருந்து ரூ.50,000/-, ரூ.49,000/-இருமுறை எடுக்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்ததாகவும் , இது குறித்து சக்திவேல் என்பவர் கடந்த 22.06.2025 அன்று, J-13 தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , புகாரானது அடையாறு காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் இணையவழி குற்றப் பிரிவில் விசாரணையில் இருந்து வருகிறது.

SMS மற்றும் Whats app - ல் Link பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் 

சமீப காலமாக இணைய தளத்தின் மூலமாக குற்றங்களை புரிந்து வரும் மர்ம நபர்கள் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்று உண்மையில்லாத குறுஞ் செய்திகளை பொது மக்களுக்கு அனுப்பி அதன் மூலம் மோசடியான இணையவழி இணைப்புகளை (URL Link) தொடச் செய்து அதன் மூலமாக கைப்பேசியை செயலிழக்க வைத்து பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்து சட்ட விரோதமாக பணத்தை திருடி வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட்டு தாங்கள் பயன்படுத்தும் கைப்பேசிக்கு வரும் SMS மற்றும் WhatsApp-க்கு வரும் குறுஞ் செய்திகளில் Traffic Challanல் குறிப்பிடுவதை போன்று வாகன எண்ணை போலியாக குறிப்பிட்டு அனுப்பும் இணையவழி இணைப்பிற்குள் (URL Link) செல்ல வேண்டாம் என்றும் மேலும் இணையவழி குற்றவாளிகள் கெட்ட நோக்கதோடு அனுப்பி வைக்கும் மோசடியான URL Link மற்றும் APP -க்குள் செல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும் படியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய இணைய வழி குற்றத் தடுப்பு உதவி எண்

மேலும் இணையவழி மோசடிகாரர்கள் அனுப்பி வைக்கும் URL Link மற்றும் APP-க்குள் சென்றால் , அது உடனே மோசடியான இணையவழி தளத்திற்கு அழைத்து சென்று பாதிக்கப்பட்ட நபர்களின் (புகார்தாரர்) கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி, OTP, UPI விவரங்கள், கைப்பேசியில் இருக்கும் தொடர்பு எண்கள் மற்றும் சேமித்து வைத்திருக்கும் அனைத்து விவரங்களையும் மர்மநபர்கள் தொலைவிலிருந்தே எடுத்து மோசடி வேலையில் ஈடுபட்டு பண இழப்பை ஏற்படுத்துகின்றனர்.

பொது மக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத் தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக மனுதாக்கல் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget