மேலும் அறிய

Chennai Police: டிராஃபிக் சிக்னலில் இனி பாட்டுக்கு ‘நோ’: சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!

சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

தினசரி வாழ்க்கையில் பல காரணங்களுக்காக வாகனங்களில் விரைந்து செல்லும் நாம் பல நேரங்களில் முக்கியமான தருணங்களில் போக்குவரத்து சிக்னலில் மாட்டிக் கொண்டு அல்லல்பட நேரிடும். குறிப்பாக அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் நிலை இத்தகைய போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் அவ்வளவுதான். சில நொடிகள் தொடங்கி 2 நிமிடங்கள் வரை போக்குவரத்து சிக்னலில் காத்திருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். 

இப்படி வாகன ஓட்டிகள் அவதியுறுவதை தடுக்கும் பொருட்டு சிக்னலில் காத்திருப்பவர்களை மன மகிழ்வை ஏற்படுத்தும் வகையில், சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களும், சில இடங்களில் கரோக்கி இசையும் ஒலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் தங்கள் டென்ஷன் மறந்து பாட்டை ரசிக்க தொடங்கி விடுகிறார்கள். சென்னையில் அமலில் இருந்த இந்த முறை வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்பாட்டு வந்தது. 

கடும் எதிர்ப்புகள்

காவல்துறையின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் சாலை விதிகளை பின்பற்றுதல், ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு போன்ற வாசகங்களும் இசையின் நடுவே ஒலித்து வந்தது. அதேசமயம் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கனவே காற்று மாசு, வாகன இரைச்சலால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பாடல் ஒலிக்கும் முறை இன்னும் கொடுமையாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்தனர். 

மேலும் சில இடங்களில் போலீசாரை அணுகி பாடல்களின் சத்தத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். தொடர்ந்து அவர் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், காவலர்கள் பணி  நேரத்தின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் முக்கிய சிக்னல்களில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஒலி மாசுபாடு ஏற்படுவதால் பாடல்களை ஒலிக்க விட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சிக்னலில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget