மேலும் அறிய

Rope Car: இனி மெரினா முதல் பெசன்ட் நகர் வரை பறக்கலாம்!? வருகிறது ரோப் கார் சேவை?

சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக அரசியல் தலைவர்களின் நினைவிடம்,கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என அனைத்தும் அருகருகே உள்ளதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மக்களும் அதிகளவில் வருகை தருவார்கள். 

இதனால் மெரினா கடற்கரை சாலைகள் போக்குவரத்து நெருக்கடியால் திணறும். அருகில் பறக்கும் ரயில் நிலையம் இருந்தாலும் மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதாலும் அந்த சாலையே எப்போதும் பரபரப்பாக காணப்படும். உலகின் 2வது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் சிறப்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பலரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

குறிப்பாக பழனி கோவிலில் உள்ளது போன்று ரோப் கார் வசதி செய்தால் மக்கள் பயனடைவார்கள் என பலரும் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு பலமுறை பரிசீலித்து வந்தாலும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  மெரினாவில் ரோப்கார் கொண்டு வருவது குறித்த சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதில் முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இது வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் மத்திய அரசு இந்தியாவில் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்ட்ராவில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை 4.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலமாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 10 இடங்களில் ரோப் கார் சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மேலும் ரோப் கார் சேவைக்காக புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடற்கரையில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மட்டுமல்லாமல் மெரினா கடற்கரைக்கு வருகை தரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
தமிழகத்தில் நாளை ( 29.07.26 ) மின் தடையை அறிவித்த மின்சார வாரியம்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget