மேலும் அறிய

Rope Car: இனி மெரினா முதல் பெசன்ட் நகர் வரை பறக்கலாம்!? வருகிறது ரோப் கார் சேவை?

சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக அரசியல் தலைவர்களின் நினைவிடம்,கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என அனைத்தும் அருகருகே உள்ளதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மக்களும் அதிகளவில் வருகை தருவார்கள். 

இதனால் மெரினா கடற்கரை சாலைகள் போக்குவரத்து நெருக்கடியால் திணறும். அருகில் பறக்கும் ரயில் நிலையம் இருந்தாலும் மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதாலும் அந்த சாலையே எப்போதும் பரபரப்பாக காணப்படும். உலகின் 2வது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் சிறப்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பலரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

குறிப்பாக பழனி கோவிலில் உள்ளது போன்று ரோப் கார் வசதி செய்தால் மக்கள் பயனடைவார்கள் என பலரும் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு பலமுறை பரிசீலித்து வந்தாலும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  மெரினாவில் ரோப்கார் கொண்டு வருவது குறித்த சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதில் முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இது வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் மத்திய அரசு இந்தியாவில் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்ட்ராவில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவதாக சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை 4.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலமாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 10 இடங்களில் ரோப் கார் சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மேலும் ரோப் கார் சேவைக்காக புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடற்கரையில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மட்டுமல்லாமல் மெரினா கடற்கரைக்கு வருகை தரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget