மேலும் அறிய

Chennai high Court Dowry Case : வரதட்சணை கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

Chennai high Court Dowry Case : வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார் நீதிபதி.

வரதட்சணை கொடுமை வழக்குகளில் ’தனியாக வாழ்கிறோம்’ என்னும் காரணத்தைக் கூறி பெற்றோர் தப்பித்துக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  குழந்தைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது பெற்றோரின் மிக முக்கியமான கடமை என்றும் தெரிவித்துள்ளது.

வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து  கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணவன் தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மேல் முறையீடு செய்தனர். மேலும், தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க கோரியிருந்தனர்.

Chennai high Court Dowry Case : வரதட்சணை கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

மனுவில், திருமணமான நாளிலிருந்து மகனும், மருமகளும் தனிக்குடித்தனம் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும், தாங்கள் தனியாகத்தான் இருந்துவந்ததாகவும் தெரிவித்தனர்.  மருமகளின் தற்கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும்  மருமகளை துன்புறுத்தியதற்கு போதிய ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.  . 

வழக்கை விசாரித்த நீதிபதி, வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒருபுறம்  மகனுடன்  வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளை பெறுவதாகவும் தெரிவித்தார்.

மகன் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் வசிக்கவில்லை கூறி, பெற்றோர்கள் தப்பித்துக்கொள்வது இந்த சமூகத்திற்கு தவறான தகவலை கொண்டு செல்வதாகவும்  சுட்டிக்காட்டினார். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, இருப்பிடம் தருவது, நல்ல கல்வியை வழங்குவது, நல்ல வேலையைப் பெற தங்கள் குழந்தையை ஊக்குவிப்பது மட்டுமல்ல,
பொறுப்புள்ள குடிமகனாக வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை எனக் கூறிய நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து விட்டார். இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை நீதிபதி வரும்  28-aaம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

2012-க்கான தேசிய குற்றப்பதிவு அமைப்பின் தகவல்படி, இந்தியாவில் 8233 வரதட்சணை மரணங்கள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012-இல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15 சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012-இல் 110 வரதட்சணை மரணங்கள், 1965 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
TMC-யில் பரபரப்பு! முக்கிய தலைவர் விலகல்: அதிர்ச்சியில் தொண்டர்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
TMC-யில் பரபரப்பு! முக்கிய தலைவர் விலகல்: அதிர்ச்சியில் தொண்டர்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget