மேலும் அறிய

Chennai corporation on Covid19 : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் நாளை முதல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, மாநிலம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும்  கட்டுப்பாடுகளுடன் ஊரடங்ககை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் சார்பில் உதவி வருவாய் அலுவலர்  மற்றும் உரிமம் ஆய்வாளர் என இரு நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என இரு நபர்கள் மற்றும் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Chennai corporation on Covid19 : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ”சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்க குழுவினர் தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொளள வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

9.4.2021 முதல் இதுவரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூபாய் 1 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில், மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் 6.5.2021 முதல் இதுநாள் வரை ரூபாய் 21 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என மேலும் 15 ஊரடங்கு அமலாக்க குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள் மக்களிடம் அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Embed widget