மேலும் அறிய

Chennai corporation on Covid19 : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் நாளை முதல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, மாநிலம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும்  கட்டுப்பாடுகளுடன் ஊரடங்ககை நடைமுறைப்படுத்த மண்டலத்திற்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் சார்பில் உதவி வருவாய் அலுவலர்  மற்றும் உரிமம் ஆய்வாளர் என இரு நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என இரு நபர்கள் மற்றும் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Chennai corporation on Covid19 : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதலாக 15 மண்டல குழுக்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து அமைக்கப்பட்ட மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ”சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இன்று ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில், ஊரடங்கு அமலாக்க குழுவினர் தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொளள வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

9.4.2021 முதல் இதுவரை அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூபாய் 1 கோடியே 34 லட்சத்து 46 ஆயிரத்து 390 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில், மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் மூலம் மட்டும் 6.5.2021 முதல் இதுநாள் வரை ரூபாய் 21 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகளை மீறும் நபர்களை மேலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்திற்கு ஒரு குழு என மேலும் 15 ஊரடங்கு அமலாக்க குழுக்கள் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள் மக்களிடம் அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget