மேலும் அறிய

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கிய காசோலைகள் ‛பவுன்ஸ்’

தமிழகத்தை பதபதைக்க வைத்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றி ‛பவுன்ஸ்’ ஆனதாக புகார் எழுந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி  ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர்   உயிரிழந்தனர். இந்நிலையில் உயரிழந்தவர்களின் 25 குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான  காசோலையில் பணம் இல்லாததால்  தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கிய காசோலைகள் ‛பவுன்ஸ்’

குடும்பத்தில் முக்கிய நபரை இழந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசு முயற்சியில் ஆலை நிர்வாகம் வழங்கிய காசோலையை மாற்றுவதற்காக வங்கிச் சென்ற போது தான், அதில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதுவரை 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளதாகவும் மற்ற 24 பேரின் காசோலையில் பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட போது, அவர்கள் தரப்பிலும் முறையான பதில் இல்லை. அதிகாரிகள் தரப்பில் முயற்சி மேற்கொண்டும் அதுவும் உதவவில்லை. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட முடிவு செய்தனர்.  

நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினர்,  மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் தங்கள் புகாரை மனுவாக அளித்தனர். 


பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கிய காசோலைகள் ‛பவுன்ஸ்’

புகார் மனுவில், ‛நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகள் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ள அவர்கள், உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர வேண்டும்,’ என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.  அதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு அறிவித்த தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை இதுவரை ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்றும், மாநில அரசு அறிவித்த தலா 3 லட்சம் நிவாரண தொகை இதுவரை 17 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,’ வருத்தம் தெரிவித்த அவர்கள்,  27 குடும்பத்தினரும் குடும்ப தலைவர்களை இழந்து நிற்கதியாக நிற்கும் நிலையில் வாழ்வாதரத்திற்கு உதவி செய்யும் வகையில்  அனைவருக்கும் முறையான நிவாரண உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து ஆட்சியர் கன்னணினிடம் கேட்டபோது, ‛‛தற்போது தான் இப்பிரச்னை தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும்,  உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என உறுதியளித்தார். 

தமிழகத்தை உலுக்கிய பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆன நிலையில் சம்பவம் நடந்த போது காட்டிய அக்கறையை அதன் பின் அதிகாரிகள் காட்டவில்லை என்கிற வருத்தம் பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளது. உடனே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாKanimozhi Slams Modi | ”மோடிக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு” கடுமையாக சாடிய கனிமொழி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Embed widget