மேலும் அறிய

காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்ததடைந்தது - வினாடிக்கு 15,000 கன அடியாக உயர்வு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு  வினாடிக்கு சுமார் 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து  உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு இந்த இரண்டு அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 74,356 மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 30,00 கன அடி என மொத்தம் 1,04,356 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுலுக்கு  தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 
 

காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்ததடைந்தது - வினாடிக்கு 15,000 கன அடியாக உயர்வு
 
 
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளிலிருந்து முதலில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு  வினாடிக்கு சுமார் 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து, கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
 

காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்ததடைந்தது - வினாடிக்கு 15,000 கன அடியாக உயர்வு
 
மேலும் நீர்வரத்து படிப்படியாக உயரும் என்பதால், நேற்றே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்தார். மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செல்ல கூடாது எனவும், ஆற்றல் இறங்கவோ, கால்நடைகளை ஆற்றுப் பக்கம் அனுப்பவவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நீர்வரத்து அதிகரப்பால், ஒகேனக்கலில் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  மேலும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், படிப்படியாக உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திறக்கப்பட்ட  50,000 கன அடி தண்ணீர், நாளை மதியத்திற்குள் வர வாய்ப்புள்ளது. மேலும் நேற்று இரவு திறக்கப்பட்ட ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் நாளை மாலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் கண்காணித்து அளவீடு செய்து வருகின்றனர். மேலும் இரண்டு அணிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தமிழகத்திற்கான நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget