Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(23-12-2025) மின் தடை.. மொத்தம் எவ்வளவு நேரம்? முழு அப்டேட்
Bengaluru Power Cut: பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23-12-25 )நகரின் முக்கிய இடங்களில் 08 மணி நேரம் மின் தடையை செய்யவுள்ளது.

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பெங்களூரு நகரில் 7 மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.
எந்த பகுதியில் மின் தடை?
தெற்கு மற்றும் மேற்கு பெங்களூரு (காலை 10:00 - மாலை 4:00 மணி வரை)
தெற்கு மற்றும் மேற்கு பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
பாதிக்கப்படும் பகுதிகள்: கோணனகுன்டே, தலகட்டபுரா, தொட்டகல்லசந்திரா, ஸ்ரீநிதி லேஅவுட், அவலஹள்ளி, ரகுவனஹள்ளி, குப்பலாலா, குவேம்புநகர், வி.வி நகர் மற்றும் லேஅவுட், பாலாஜி லேஅவுட், ராயல் ஃபார்ம், அரேஹள்ளி, இட்டமடு, ஏஜிஎஸ் லேஅவுட் (AGS Layout), சிக்கலசந்திரா, டி.ஜி லேஅவுட், புவனேஸ்வரி நகர், இஸ்ரோ (ISRO) லேஅவுட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழில்பேட்டை பகுதிகள், குமாரசாமி லேஅவுட், விட்டல் நகர், விக்ரம் நகர், எலச்சனஹள்ளி, கதிரேனஹள்ளி மற்றும் அப்பையா நாயுடு ஸ்டுடியோ பகுதிகள்.
இங்குள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இந்த நேரத்தில் மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும்.
ஹெப்பல் மற்றும் கெம்பாபுரா (காலை 11:00 - மாலை 4:00 மணி வரை)
வடக்கு பெங்களூருவின் சில பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும்.
பாதிக்கப்படும் பகுதிகள்: மான்யதா ரெசிடென்சி, பிடிஎஸ் லேஅவுட், கோத்ரெஜ் அபார்ட்மெண்ட்ஸ், ஹெப்பல், கெம்பாபுரா, விநாயகா லேஅவுட், சிரஞ்சீவி லேஅவுட், வெங்கடகவுடா லேஅவுட், ராச்சனஹள்ளி, ஸ்ரீராமபுரா, சாமுண்டேஸ்வரி லேஅவுட், ராயல் என்க்லேவ், மேஸ்திரி பால்யா, தானிசந்திரா, SNN கிளர்மாண்ட், கார்லே டவுன் சென்டர், பி. நாராயணபுரா கிராஸ், மந்திரி லித்தோஸ், காபி போர்டு லேஅவுட், மாரியண்ணபால்யா மற்றும் பிரிகேட் கலாடியம்.
அலுவலகங்கள்: பிடிலிட்டி (Fidelity), பிலிப்ஸ், ஐபிஎம் (D1 முதல் D4 பிளாக்), நோக்கியா (L5), சீமென்ஸ் (L6), MFAR, JNC மற்றும் மதுவனா M2 பிளாக் ஆகிய கார்ப்பரேட் அலுவலகங்களிலும் மின்சாரம் பாதிக்கப்படலாம்.
EPIP மற்றும் டெக் பார்க் பகுதிகள் (காலை 10:00 - மாலை 5:00 மணி வரை)
மிக நீண்ட நேர மின்வெட்டு EPIP லேஅவுட் மற்றும் முக்கிய தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் மாலை 5 மணி வரை நீடிக்கும்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.






















