Milk Price Hike: பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. நாளை முதல் அமல்.. மக்களுக்கு ஷாக் கொடுத்த ஆரோக்யா!
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன. அந்த வகையில் ஆரோக்யா பால் நிறுவனம் நாளை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆரோக்யா பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வெகு விரைவில் பிற தனியார் பால் நிறுவனங்களுக்கும் விலை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பாலு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் முன்னணி மற்றும் சிறு, குறு, நடுத்தர தனியார் பால் நிறுவனங்களுக்கிடையே பால் கொள்முதல் செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும் கடந்தாண்டு இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் பாலுக்கான கொள்முதல் விலையை ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி வழங்கி வருவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின.
இந்த நிலையில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் முடிவிற்கு தனியார் பால் நிறுவனங்கள் வந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை (ஜூலை 9) முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்துவதோடு பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கான கமிஷன் தொகையையும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
எவ்வளவு விலை உயர்வு?
அதன்படி 500 மிலி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) ரூ.29ல் இருந்து ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) ரூ.35ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Cream Milk) ரூ.39ல் இருந்து ரூ.41 ஆகவும், 1000 மி.லி. சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) ரூ.54ல் இருந்து ரூ.57 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) ரூ.66ல் இருந்து ரூ.69 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Cream Milk) ரூ.73ல் இருந்து ரூ.76 ஆகவும், 500கிராம் ஹட்சன் தயிர் ரூ.42ல் இருந்து ரூ.44 ஆகவும், ஆரோக்யா தயிர் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும், விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
Also Read: வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அடுத்தடுத்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்த இருக்கின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















