மேலும் அறிய

அரியலூர் நாட்டு பட்டாசு ஆலை விபத்து.. 10 ஆக உயர்ந்த உயிரிழப்பு..!

அரியலூர், செந்துறை, திருவையாறு, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர் அம்பிகா தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அருகே நாட்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவரின் பட்டாசு தயாரிப்பு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

என்ன நடந்தது..? 

அரியலூர் - திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் யாழ் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் பெயரில் இயங்கி வந்த  திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை  இன்று காலை 
10 மணி அளவில் திடீரென வெடித்து சிதறி உள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு பட்டாசு ஆலை பணிகள் துவங்குவது வழக்கம். முன்னதாகவே பணிக்கு வந்த பணியாளர்கள் பட்டாசு பெட்டக அறையில் அமர்ந்து காலை உணவு அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின.

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஊழியர்கள் தப்பமுடியாமல் உள்ளுக்குள்ளே சிக்கியதாக தெரிகிறது.
சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்தாக என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு வெடிக்கத் வாங்கிய பட்டாசுகள் தற்போது வரை தொடர்ந்து வெடித்துக் கொண்டே உள்ளன. அரியலூர், செந்துறை, திருவையாறு, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர் அம்பிகா தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருமானூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமழப்பாடி ராஜேந்திரன் என்பவரது பெயரில் பட்டாசு ஆலை காண லைசன்ஸ் பெறப்பட்டு அவரது மருமகன் அருண்குமார் நிறுவனத்தை நடத்தி வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பட்டாசு ஆலை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட கலெக்டர் ஆணி மேரி சுவர்ணா, காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாம் இட்டு தொடர்ந்து நிலைமை கண்காணித்து வருகின்றனர்

கீழப்பழூர், திருமானூர் சாலையின் முன் பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் பின்பக்கத்தில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் வயல்களுக்கு இடையில் இந்த பட்டாசு ஆலை பாதுகாப்பு அற்ற முறையில் அமைந்துள்ளது.

திருமானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம தன்னார்வல இளைஞர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஐந்து உடல்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
Embed widget