மேலும் அறிய

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ்.

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.

அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த நிலையில் நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஈபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.

மாணவியை சீரழித்தாக கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்ற காமக்கொடூரன், திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன. துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் செய்திகளில் வருகின்றன, சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றன.

சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது? அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று திராவிட மாடல் அரசு சொல்வது "சர்க்கரையை எறும்பு தின்றது , சாக்கு பையை கரையான் தின்று விட்டது” என சொல்வது போலிருக்கிறது.

அந்த அளவிற்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறதா திமுக அரசு? பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்?

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகளின் கூடாரமா?

பல்கலைகழகங்களை உயர் கல்வி பயிலும் பாடசாலைகளாக நடத்துவதற்கு பதில், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக இந்த அவல ஆட்சியும் அதை நடத்தும் கட்சியினரும் மாற்றி வைத்திருப்பது உலகக் கொடுமைகளின் உச்சம்.

ஒரு ட்வீட் போட்டு கருத்து சொல்லுபவர்களைத் தேடித் தேடிக் கைது செய்யும் காவல்துறை, ஏற்கனவே பல வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனை கைது செய்யாதது ஏன்? ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலா? போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருப்பது என்பது, திமுக அரசுதான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே வலுவாக எழுப்பியுள்ளது.

ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக அரசாங்கமா?

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து மாநில காவல் துறை விசாரணை போதாது என்று சிபிஐயை விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டீர்கள் , ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக அரசாங்கமே உச்ச நீதிமன்றம் வரை சென்று உறுதுணையாக இருக்குமானால், பாலியல் குற்றங்கள் புரிபவர்க்கு இ‌ந்‌‌த அரசின் மீது எப்படி அச்சம் வரும் ? இதுதான் உண்மை என்றால், உங்களிடம் சட்டம் ஒழுங்கைக் காக்கக் கோரி வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையினை எளிதில் கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அதனை இப்போதே கைவிட்டு விடுங்கள்.மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்; அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இன்று அஇஅதிமுக சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடந்த போரட்டதில் , மக்களுக்காக போராடிய நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் , திமுக அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கி கைது செய்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.

மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழ்நாட்டை காப்பதற்கான ஒரே வழி

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழ்நாட்டை காப்பதற்கான ஒரே வழி..’’

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்EPS Plan | Ponmudi vs Lakshmanan  | பொன்முடி இனி டம்மி!  பவருக்கு வந்த எ.வ.வேலு  லட்சுமணன் GAME STARTS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
SC Women CJI: 75 ஆண்டுகள் - உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி யார்? பதவிக்காலத்தில் ட்விஸ்ட்
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Gold Rate Today: காலையிலே ஹாப்பி! மீண்டும் 70 ஆயிரத்திற்கு கீழே சென்ற தங்கம் விலை
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
Top 10 News: உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கேள்வி.. ஐநா-வை சந்திக்கும் இந்தியா - 11 மணி பரபரப்பு
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
TN Land Registration: ஓய்ந்தது தலைவலி, மீண்டும் பவுத்தி பட்டா..! ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு, தேவையான ஆவணங்கள்
Indias Neighbour Countries: சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா - உறவு எப்படி?
Indias Neighbour Countries: சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா - உறவு எப்படி?
Embed widget