![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anbumani Ramadoss : மாதிரி பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசிற்கு பா.ம.க. கோரிக்கை
Anbumani Ramadoss : தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![Anbumani Ramadoss : மாதிரி பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசிற்கு பா.ம.க. கோரிக்கை Anbumani Ramadoss PMK Condemns Entrance Exam To be Conducted March 4th for Tamil Nadu Model School Admission Anbumani Ramadoss : மாதிரி பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு அரசிற்கு பா.ம.க. கோரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/0bbd1a8385ca096106aece4c687258151677752012822333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மாதிரி பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யுமாறும் தமிழ்நாடு அரசை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்.” தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நாளை மறுநாள் மார்ச் 4-ஆம் நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்பு - 10-வது வகுப்பின் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவா?
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் தான், அத்தேர்வை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கின்றன. நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டு பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என்ன வகையான சமூகநீதி என்றும்ப் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னேற்றம் பாதிக்கக்கூடாது:
நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தர உள்கட்டமைப்பு மற்றும் உண்டு - உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், அவை கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை புறக்கணிப்பதற்கானதாக இருக்கக்கூடாது.
நுழைவுத் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கே நுழைவுத் தேர்வு இல்லாதபோது, பத்தாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும். இத்தேர்வும், நீட்டும் ஒரே கொள்கையிலானவை. அச்சமூக அநீதிக் கொள்கை நமக்குத் தேவையில்லை. மாதிரி பள்ளி நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)