மேலும் அறிய

குழந்தைகள் அடையாளம் காண்பதில் திருப்தி இல்லை ; தமிழ்நாடு குறித்து ‛அமிகஸ்’ வேதனை

தமிழ்நாட்டில் கொரோனாவால் தாய் அல்லது தந்தை, அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் மட்டுமே அடையாளம் காணப்படுகின்றனர் என நீதிமன்ற வழக்குகளுக்கு பரிந்துரை அளிக்கும் இந்திய சட்ட அமைப்பான அமிகஸ் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உச்சபட்சமாக கடந்த மாதம் தினசரி 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள். தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  ஒரு லட்சமாக குறைந்துள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் உயிரிழந்த சோகங்களும் அரங்கேறியது. நாட்டில் பல பகுதிகளில் குடும்பத் தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவிகள் அல்லது பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நடந்தது.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாக கடந்த வாரம் புள்ளிவிவரங்கள் வெளியானது. தமிழகத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவசம் என்றும், அவர்களின் பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டங்கள் மற்றும் வழக்குகளுக்கு பரிந்துரை வழங்கும் இந்திய சட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது அமிகஸ். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் கொரோனாவின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் கொரோனாவால் தாய் அல்லது தந்தை, அல்லது பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளை மட்டும் அடையாளம் கண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் குழந்தைகளை அடையாளம் காண்பது திருப்திகரமாக உள்ளது. இதை அவர்கள் `லிவ் லா’ என்ற தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

கொரோனாவால் நாடு முழுவதும் குழந்தைகளின் கல்வி, உணவு, சத்துணவு முறைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பராமரிப்பும் பல பகுதிகளில் சிரமம் ஆகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் கல்வி, வாழ்க்கை முறை, பாதுகாப்பு குறித்த விவகாரங்களிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் டெல்லி..அருமையாக பந்து வீசும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget