மேலும் அறிய

கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அமராவதி ஆற்றில் இருந்து தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கரூர் மாவட்டம், பவித்திரம் பஞ்சாயத்தில் கடந்த, 1881ம் ஆண்டில், 360 ஏக்கர் நிலப்பரப்பில் தாதம்பாளையம் ஏரி உருவாக்கப்பட்டது. அமராவதி ஆற்றின், பிரதான பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில், தண்ணீர் இல்லாத போது, தாதம்பாளையம் ஏரி தண்ணீர் மூலம், 3,000 ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. பின், பொதுப்பணித்துறை வசம் இருந்த, ஏரி தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.


கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

கடந்த, 2002ல் நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது, ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழைநீர், ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில், அமராவதி ஆற்றில் கலந்தது. அதை தடுக்க ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் தாதம்ப்பாளையம் ஏரி. தற்போது, சீமை கருவேல மரங்கள் முளைத்து வறண்ட நிலையில் உள்ளது.

அமராவதி ஆற்றில் ஓடும் தண்ணீரை, தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடந்த, 1950 முதல் போராடி வருகின்றோம். அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இறுதியாக கடந்த, 2002ல், 16 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆறு நஞ்சை தலையூர் முட்டணையிலிருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட திட்டமும் கிடப்பில் உள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் அமராவதி ஆற்றில் வந்த, தண்ணீர் காவிரி ஆறு வழியாக கடலுக்குச் சென்று விட்டது. இதனால், அமராவதி வெள்ள உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 


கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

அதன் மூலம், சின்ன முத்தாம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லி செல்லிபாளையம் குளம், தொட்டிவாடி குளம், நிமித்தப்பட்டி குளம், கழுவம்பாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், 75க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். மேலும், 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்று கூறினர்.

 

மாயனூர் கதவணைக்கு குறைந்த தண்ணீர் வரத்து

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 9000 கனஅடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 17 ஆயிரத்து, 573 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,039 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவே சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 8,219 கனஅடி தண்ணீரும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 820 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 831 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 975 கன அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 446 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 88.29 அடியாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.59 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா...? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.46 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Embed widget