மேலும் அறிய

Ex. Minister K.Pandiarajan: என்னது? பாஜகவில் இணைகிறேனா? - முற்றுப்புள்ளி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா!

அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன்  பாஜகவில் இணைய போவதாக பரவிய தகவலுக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன்  பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சித் தாவல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திடீரென பாஜகவில் இணைந்தார். இது அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.  அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சி தாவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜகவில் இணைந்த விஜயதரணி நேற்று அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. நாளை பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்து வருகிறது.

இப்படியான சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கா. பாண்டியராஜன் தனது எக்ஸ் வலைத்தளப்பகுதியில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் !” என பதிவிட்டுள்ளார்.  இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும், அதிமுகவில் தான் தனது பணியை தொடர்வார் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget