மேலும் அறிய

Ex. Minister K.Pandiarajan: என்னது? பாஜகவில் இணைகிறேனா? - முற்றுப்புள்ளி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா!

அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன்  பாஜகவில் இணைய போவதாக பரவிய தகவலுக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன்  பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சித் தாவல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திடீரென பாஜகவில் இணைந்தார். இது அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.  அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சி தாவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜகவில் இணைந்த விஜயதரணி நேற்று அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. நாளை பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்து வருகிறது.

இப்படியான சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கா. பாண்டியராஜன் தனது எக்ஸ் வலைத்தளப்பகுதியில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் !” என பதிவிட்டுள்ளார்.  இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும், அதிமுகவில் தான் தனது பணியை தொடர்வார் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget