மேலும் அறிய

ADMK Breaking LIVE: ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

AIADMK: அதிமுக கட்சியில் தொடரும் சர்ச்சைகள் குறித்த உடனடி தகவல்கள் இங்கே...

LIVE

Key Events
ADMK Breaking LIVE: ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

Background

AIADMK LIVE Updates: 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. 

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதியை அணுகிய ஓபிஎஸ்

அதில் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாள்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாகவும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் ஓபிஎஸ் முறையிட்டார்.

மேலும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுக்கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழை ஓபிஎஸ் வீட்டில் இருந்தவர்கள் வாங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொருளாளர் என்ற முறையில் பங்கேற்பாரா என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்தி வைக்குமாறு ஓபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 7ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறும் ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஈபிஎஸ் தரப்பு வாதம்

முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இதனையடுத்து, பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மீண்டும் பொதுச் செயலாளர் பதவி

வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

பொதுக்குழு அன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்

ஒற்றைத் தலைமை போட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

17:56 PM (IST)  •  06 Jul 2022

ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

14:36 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு மீதான விசாரணை - நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு நடைபெற தடை விதிக்க கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்க்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

14:34 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

14:34 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு தாக்கல்- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஓ.பி.எஸ். மனு மீது 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் 2.15 மணிக்கு விசாரணைக்கு நடைபெற இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.

இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோர் ஆஜராக உள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராக உள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என  உச்ச நீதிமன்றம் இன்று  தெரிவித்திருந்தது.

12:59 PM (IST)  •  06 Jul 2022

பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி- ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை

வரும் 11- ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை தெரிவித்தார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget