மேலும் அறிய

‛அண்ணன் போயிட்டான்... பெற்றோரையாவது காப்பாத்துங்க பிளீஸ்...’ ஆக்சிஜன் படுக்கை கேட்டு கதறும் இளம் பெண்

ஆவடி அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் பெற்றோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும். தனது பெற்றோரை காப்பாற்ற உதவ வேண்டுமென இளம்பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் கொரோனாவால் எனது அண்ணனை இழந்தேன், பெற்றோரை காப்பாற்ற உதவுங்கள் என்று இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை மருத்துவமனையில் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரிடம் உதவிக் கேட்டு சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



‛அண்ணன் போயிட்டான்... பெற்றோரையாவது காப்பாத்துங்க பிளீஸ்...’ ஆக்சிஜன் படுக்கை கேட்டு கதறும் இளம் பெண்


இந்நிலையில், 62% நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு முகநூலில் கண்ணீர் மல்க இளம்பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு  வைரலாகியுள்ளது.


சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ஷீலா தம்பதி. இவர்களது மகளான ஐஸ்வர்யா , முகநூலில் லைவ் வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அதில் தான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் தனக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சகோதரன் கொரோனா பாதித்து இறந்ததாக கூறிய அவர், தற்போது தனது தாயும் தந்தையும் கொரோனா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆவடி அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் பெற்றோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும். தனது பெற்றோரை காப்பாற்ற உதவ வேண்டுமென கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இந்த வீடியோவை காணும் அனைவரும் தங்கள் வீட்டு மகளாய் அவரை எண்ணி உதவ முன்வர வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/OqTFkfnKpI4?start=120" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

முன்னதாக, சகோதரனை இழந்த தான் மேலும் இரு உயிர் இழப்பை தாங்கக்கூடிய சக்தி கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். கொரோனா உயிரிழப்பு என்பதை கடந்து ஒரு குடும்பத்தை எவ்வாறு உருக்குலைக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ சரியான உதாரணம். ஏற்கனவே ஒருவரை இழந்த குடும்பத்தில், மேலும் இருவர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாசகம் கேட்பது போல் ஒவ்வொரு நாளும் ஆக்சிஜனுக்கு அல்லாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் படுக்கைகள் கூட இல்லையென்றால் எவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறது என தெரியவில்லை. இன்னும் நிலைமை சரியாகவில்லை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால், எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க முடியவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget