மேலும் அறிய

ஆல் பாஸ் ஆனது தெரியாமல் மீண்டும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்… குடியாத்தம் அருகே குளறுபடி!

தான் பாஸ் செய்து விட்டோம் என்று அறியாத ஒரு மாணவரை பள்ளி நிர்வாகம் மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு வருடமே படிக்க வைத்துள்ளது.

குடியாத்தம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மீண்டும் அதே பள்ளியில் 10 வகுப்பை ஓராண்டாக பயின்று வருவது தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதே நம் சமூகத்தின் குழந்தைகள் மேல் வைக்கும் முதல் போட்டி மனநிலை. அதனை கையாளும் வேலையை செய்துதான் ஒரு மனிதன் தன் வாழ்நாள் அழுத்தங்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்கிறோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் நம்மை சில வருடங்கள் முன்பாகவே மனதளவில் தயார் செய்கிறார்கள். பல மாணவர்கள் தவமிருப்பதுபோல் முழு மூச்சுடன் படித்து தேர்வை எழுதிவிட்டு சம்மர் கொண்டாட்டத்தில் இணைவார்கள். எல்லா கடமைகளையும் மறந்து கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும்போது இடையில் வருவது தான் ரிசல்ட். இதையெல்லாம் கடந்து வருவது என்பது அனைவருக்கும் ஒரு அசைபோடும் நிகழ்வாகும். இதில் பலர் தேர்ச்சி பெறுவதும், சில பேப்பர்கள் தேர்ச்சி பெறாமல் போவதும் உண்டு. அந்த பேப்பர்களை மீண்டும் நடைபெறும் ஜூன் தேர்வில் ஏழுதி தேர்ச்சி பெறுவது உண்டு.

ஆல் பாஸ் ஆனது தெரியாமல் மீண்டும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்… குடியாத்தம் அருகே குளறுபடி!

ஆனால் கொரோனா காலத்தில் அனைவரும் பாஸ் என்று அறிவித்ததால் புதிய மாணவர்கள் அந்த அனுபவங்களை பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இன்னும் வித்தியாசமான அனுபவங்களெல்லாம் அது கொடுத்திருக்குறது. தான் பாஸ் செய்து விட்டோம் என்று அறியாத ஒரு மாணவரை பள்ளி நிர்வாகம் மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு வருடமே படிக்க வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும் கணேசனுக்கு தற்போது பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. அதன்மூலம் தான் அவர் ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதி பாஸ் செய்தது தெரிய வந்துள்ளது. அப்போது கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், தங்கள் மகன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. இதனால் மாணவர் கணேசன் மற்றும் அவரது பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆல் பாஸ் ஆனது தெரியாமல் மீண்டும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்… குடியாத்தம் அருகே குளறுபடி!

அதன்பிறகுதான் நடந்தவற்றை சொல்லி புரியவைத்திருக்கிறார்கள். அதன்பிறகு தனது மகன் கடந்தாண்டே 10ம் வகுப்பு பாஸ் ஆனது பெற்றோர்ககுக்கும் புரிந்தது. கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மீண்டும் 10ம் வகுப்பிலேயே சேர்த்து படிக்க வைத்திருக்கிறது. மாணவரும், தான் பாஸ் ஆனது கூட தெரியாமல் கல்வி பயின்று வந்துள்ளாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது. இதுபோன்று கவனக்குறைவாக இருப்பது மாணவர் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் இது குறித்து தீவிர ஆய்வு செய்து, இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Embed widget