மேலும் அறிய

திண்டிவனம் கொலை வழக்கில் சிறந்த புலன் விசாரணை.. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரிக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்

திண்டிவனம் தாய், தந்தை, தம்பி கொலை வழக்கில் சிறந்த புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரிக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வருபவர் ஆ.கனகேஸ்வரி. ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இவர் உள்ளார். இவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளராக கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார். அப்போது ஒரு கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணை மேற்கொண்டார்.

கொலை வழக்கின் விவரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா காவேரிப்பாக்கம் சுப்பராயன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 15-5-2019 அன்று ஏ.சி. எந்திரம் (ஏர் கண்டிசனர்) வெடித்து ராஜூ, அவரது மனைவி கலைச்செல்வி, இவர்களின் மகன் கவுதம் ஆகியோர் இறந்ததாக கோவர்த்தன் என்பவர் திண்டிவனம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். புகார்தாரான கோவர்த்தன் இறந்து போன ராஜூ-கலைச்செல்வி தம்பதியரின் மகன் ஆவார். இந்த வழக்கை அப்போது துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆ.கனகேஸ்வரி புலன் விசாரணை அதிகாரியாக இருந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின் போது சொத்துக்காக கோவர்த்தனும், அவரது மனைவி தீபாகாயத்திரி ஆகியோர் தந்தை, தாய், தம்பி ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி வெடிபொருள் மற்றும் வெடிகுண்டு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில்  நடந்தது. புலன்விசாரணை அதிகாரி ஆ.கனகேஸ்வரி, நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளுக்கு எதிராக சேர்க்கப்பட்டு இருந்த சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். சூழ்நிலை சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சரியான திசையில் வழக்கு நடைபெறச்செய்தவர் ஆ.கனகேஸ்வரி.

இதனால் கோவர்த்தன், தீபாகாயத்திரி 2 பேரையும் கோர்ட்டு குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. அத்துடன் குற்றவாளிகள் சாகும்வரை தூக்கிலிட வேண்டும் என்ற மரண தண்டனை அளித்து கடந்த 26-10-2021 அன்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு தடயங்கள் இல்லாத ஒரு சந்தேக மரண வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை பெற்றுக் கொடுத்தற்காக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.கனகேஸ்வரிக்கு இந்த (2022) ஆண்டுக்கான புலன் விசாரணையில் சிறந்தவர் என்ற மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
BJP Vs EPS Vs Sengottaiyan: சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
சுழன்றடிக்கும் பாஜக.. சுழலில் சிக்கிய இபிஎஸ்.. செங்கோட்டையன் கையில் அதிமுக.?
ADMK Resolution on Appavu: அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
அப்பாவுவின் பதவி தப்புமா.? அதிமுக தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
EPS Slams MK Stalin: 5 பட்ஜெட்டுமே UTTER FLOP.. சினிமா டயலாக் பேசாதீங்க.. முதல்வரை விமர்சித்த ஈபிஎஸ்
Train Cancel: ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்ட்ரலில் இருந்து செல்லும் 23 மின்சார ரயில்கள் ரத்து...
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
EPS vs Sengottaiyan: பற்ற வைத்த ஓபிஎஸ் மகன்! ஆதரவில் செங்கோட்டையன்.. கடுப்பில் எடப்பாடி
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!
Embed widget