மேலும் அறிய

Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?

Admk Bjp Alliance: தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக- பாஜக சார்பாக இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. இதற்கு டப் கொடுக்கும் வகையில் எதிர்கட்சியான அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் முதல்கட்டமாக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளது. அடுத்ததாக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவை இந்த இரண்டு கட்சிகளும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

45 தொகுதிகளை டார்கெட் வைத்த பாஜக

இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக, தமிழத்தில் மட்டும் முடியாத காரியமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக  உதவியோடு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களோடு உள்ளே நுழைந்துள்ளது. இந்த 4 எம்எல்ஏக்களை 40க்கும் மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக செல்வாக்கு உள்ள தொகுதிகளை கண்டறிந்து வருகிறது. அதன் படி முதல் கட்டமாக 60 தொகுதிகளை தேர்ந்தெடுத்த நிலையில் தற்போது வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள மைலாப்பூர், தி.நகர், கோவை, திருப்பூர், ஊட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட 45 தொகுதிகளை டார்கெட் செய்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகளுக்ககு மேல் கொடுக்க வாய்ப்பு இல்லையென உறுதியாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ள காரணத்தால் 45 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாஜகவை நம்பியுள்ள மற்ற கட்சிகளான ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழகம் வரும் பியூஸ் கோயல்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் தமிழக தேர்தல் பொறுப்பாளாரக இருந்த பியூஸ் கோயல் மீண்டும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை தமிழகம் வரும் பியூஸ் கோயல், பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாக தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. 

இபிஎஸ்- பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை

மேலும் கடந்த முறையை விட இந்த முறை பாஜகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. ஆனால் கடந்தமுறை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதை போல 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள அடுத்த கட்ட வியூகம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!
பிரசவ மரணங்களை பாதியாக குறைத்தது எப்படி? சீக்ரெட் உடைக்கும் அன்புமணி ராமதாஸ்!‌
Vijay Sangeetha Divorce:
Vijay Sangeetha Divorce: "இந்த கோர்ட்டுக்கு வராதீங்க!" - விஜய் விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி! நடந்தது என்ன?
Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!
Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget