மேலும் அறிய

சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்! இரவோடு இரவாக பறந்த போன் கால்! முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை!

போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் 17 தமிழக மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா அழித்தது.

இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவை சீண்டும் வகையில் திடீரென ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. ஜம்மு, உதாம்பூர், ஜெய்சல்மர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. ஆனால் இந்த தாக்குதலை இந்தியா வானிலேயே முறியடித்தது.

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியாவில் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய போர் பதற்ற சூழலில் காஷ்மீரில் இருக்கும் தமிழக மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வான்வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் தங்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள்னர்.

இந்நிலையில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தமிழக மாணவர்கள் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “இதுவரை 52 தமிழக மாணவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இதுகுறித்து தகவல் வந்ததும் முதலமைச்சர் இரவோடு இரவாக கால் செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

வான்வழிகளும் தரைவழிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார். அந்த 52 பேரிடமும் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். நாங்களும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் மீட்கப்படுவர். முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார்.

ஜம்முவில் உள்ள தமிழக மாணவர்களை மீட்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்கள் ஸ்ரீநகரில் தங்கி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளும் மாணவர்களுடன் நேரடியாக பேசியுள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஜம்முவில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் 8069009901 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget