மேலும் அறிய

கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

கரூரில் பல்வேறு ஆலயங்களில் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

சுபகிருத ஆண்டு பிறப்பையொட்டி கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

அதைத்தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகர், தீர்த்த விநாயகர், பாலமுருகன், விஷ்ணு, துர்க்கை, நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,  தயிர், பஞ்சாமிர்தம்,  தேன்,  நெய்,  இளநீர்,  எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,  மஞ்சள்,  சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

அதை தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய 500 கிலோ காய்கறிகள்  மற்றும் பழங்களால் மூலவர் கணபதி மற்றும் தீர்த்த விநாயகர் பாலமுருகன் விஷ்ணு துர்க்கை மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.


கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று பயம் காரணமாக ஆலயம் திறக்கப்படாமல் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். இது போல் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காய்கறி மற்றும் பழங்களால் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.


கரூர் : தமிழ் புத்தாண்டையொட்டி கற்பக விநாயகருக்கு 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம்

 

குறிப்பாக ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாள் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து நால்வர் அரங்கில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று பிரதோஷம் என்பதால் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக் கவச உடை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சி அளித்தார். ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாள் சிறப்பு அலங்காரத்தையும், அதைத் தொடர்ந்து நந்தி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தையும், காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஆன்மிக தளங்களுக்கு பொதுமக்கள் அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் நேர்த்திக் கடன் செய்து வந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget