மேலும் அறிய

கும்பகோணம் அருகே +2 மாணவர் சக மாணவர்களால் அடித்து கொலை: "மாணவர் சமுதாயம் எங்கே போகிறது?" - அன்புமணி இராமதாஸ் வேதனை

அரசு பள்ளிகளில் கல்வி கற்று  வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய மாணவர்கள்  தேவையற்ற மோதலில் ஈடுபடுவது கவலையளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே +2 மாணவர் சக மாணவர்களால் அடித்து கொலை : மாணவர் சமுதாயம் எங்கே போகிறது, நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி பள்ளியில்  12-ஆம் வகுப்பு பயின்று வந்த கவியரசன் என்ற மாணவர், அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேரால் சில நாள்களுக்கு முன் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாணவர் கவியரசனை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர்  கிராமததைச் சேர்ந்த மாணவர் கவியரசனுக்கும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலருக்கு முன்பகை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த புதன்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அம்மோதலின் தொடர்ச்சியாக புதன்கிழமை மாலை மாணவர் கவியரசன்  வீடு திரும்பும் போது  அவரை வழிமறித்த  11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கவியரசன்  முதலில் கும்பகோணம்  அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும்  மருத்துவம் பெற்று வந்த அவர்  மருத்துவம் பயனின்றி  இன்று காலை உயிரிழந்தார்.

மாணவர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த  ஏப்ரல் மாதம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்  தனியார் பள்ளியில் பயின்று  வரும் மாணவர்களுக்கு இடையே வாங்குவதில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியே  இன்னும் விலகாத நிலையில்,  இப்போது மாணவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது  வேதனையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் கல்வி கற்று  வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய மாணவர்கள்  தேவையற்ற மோதலில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. இதற்குக் காரணம்  கல்வியைக் கடந்து மாணவர்களின் கவனம் தவறான பாதைகளில் சிதறுவது தான்.  எந்தப் பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக மாறி வருகிறது.  இதற்கு புறச்சூழல்கள் ஒரு காரணம் என்றால், ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் காரணம் ஆகும். இது கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் உதவி செய்யாது.

அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் வாரம்  இரு பாட வேளைகளாவது நீதிபோதனை  வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களின்  செயல்பாடுகள் குறித்து   வகுப்பு ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன்,  அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும்  நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget