மேலும் அறிய

தருமபுரியில் ஆன்லைனில் அபராதம் கட்டாத வாகனங்கள்  பறிமுதல்

தருமபுரியில் போக்குவரத்து விதிமீறிய வழக்கில், ஆன்லைன் மூலம் அபராதம் விதித்ததில், அபராதம் கட்டாத வாகனங்கள்  பறிமுதல்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்குள் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் ஆகியவைகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து காவல் துறையினர், அந்த வாகனங்களின் எண்ணை அடையாளம் கண்டு ஆன்லைன் மூலம் அபராதம் விதித்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அபராதம் கட்டாதது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட கவல கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின் பேரில், தருமபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் ஆகியோர் இன்று தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


தருமபுரியில் ஆன்லைனில் அபராதம் கட்டாத வாகனங்கள்  பறிமுதல்

அப்போது  ஆன்லைன் மூலம் அபராதம் பெற்று கட்டாத  இருசக்கர வாகனங்கள், கார்கள்,ஆட்டோ உள்ளிட்ட 88 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அந்த வாகன உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆன்லைன் மூலம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என எடுத்து கூறி உடனடியாக  அபராத தொகையை இ சேவை மையங்களில் கட்ட வேண்டும். அவ்வாறு அபராதம் கட்ட தவறியவர்களுக்கு காவல் துறையினர் அறிவுரைகள் வழங்கினார். மேலும்  அவர்கள் அபராத தொகையை கட்டும் வரை, வாகனங்கள் போக்குவரத்து காவல் துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அபராதம் கட்டிய பிறகு அதற்கான ரசீதை போக்குவரத்து காவலரிடம் கொடுத்து, வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.

 


 


தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து தொடர்ந்து சரிந்து, 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.4.33 இலட்சத்திற்கு ஏலம்.


தருமபுரியில் ஆன்லைனில் அபராதம் கட்டாத வாகனங்கள்  பறிமுதல்

 

தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு  ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பட்டுக்கூடு வரத்து சரிந்து வந்தது. 


தருமபுரியில் ஆன்லைனில் அபராதம் கட்டாத வாகனங்கள்  பறிமுதல்
இன்று நடைபெற்ற  ஏலத்தில் மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வரவில்லை. மேலும் 12 விவசாயிகள் கொண்டு வந்த 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம்  ரூ.525-க்கும், அதிகபட்சமாக ரூ.596-க்கும், சராசரியாக 402 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த சில நாட்களாக விட,  பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்தும் விற்பனையானது. இதனால் இன்றைய ஏலத்தில் 825 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.4.33 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
Embed widget