மேலும் அறிய
வாணியாறு உபரிநீர் திறப்பால், நிரம்பிய பறையப்பட்டி புதூர், ஆலாபுரம் ஏரிகள்-விவசாயிகள் மகிழ்ச்சி
''இந்தாண்டு ஒரு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி''

வாணியாறு நீர்த்தேக்கம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் இடது, வலது புற கால்வாய்களில் மூலம் வெங்கடசமுத்திரம், மோளையானூர், ஆலாபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைகோட்டை, பறையப்பட்டி புதூர், அதிகாரப்பட்டி, சாலுர், ஏ.பளளிப்பட்டி உள்ளிட்ட ஏரிகள் பாசன வசதி பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர், உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி புதூர் ஏரிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக ஆலாபுரம் ஏரிக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆலாபுரம் ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவை கொண்ட மிக்க பெரிய ஏரி. இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஏரியின் மூலம் ஜீவா நகர், மேட்டூர் காடு, ஆலாபுரம், மெணசி, பூதந்த்தம், மருக்காலம்பட்டி, கள்ளியூர், நடூர், அம்மாபாளையம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. தற்பொழுது ஏரி நிரம்பி கோடி எடுத்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரி கோடியில் தண்ணீர் வெளியேறுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகறது. இந்த தண்ணீர் அருகில் உள்ள ஓந்தியம்பட்டி ஏரிக்கு செல்கிறது.
இதேப்போல், பறையப்பட்டி புதூர் ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதன் லம் பறையப்பட்டி புதூர், பறையப்பட்டி, கோபிநாதம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பட்டவர்த்தி, கொக்கராப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. கடந்த ஒரு வாரமாக பறையப்பட்டி புதூர் ஏரிக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்பொழுது ஏரி நிரம்பி கோடி எடுத்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரி கோடியில் தண்ணீர் வெளியேறுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. தற்போது ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் வாணியாற்றில் கலக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையில் இந்த பறையப்பட்டி புதூர் ஏரி,ஆலாபுரம் ஏரிகள் நிரம்பியது. தொடர்ந்து இந்தாண்டு ஒரு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வாணியாறு பாசன ஏரிகள் இரண்டு நிரம்பியுள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் இரண்டு ஏரிகள் நிரம்பிய உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement