மேலும் அறிய

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித் தருவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தமிழக வெற்றி கழகத்தினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர். பின்னர் பொதுமக்கள் கொடுக்கப்பட்ட மனு உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மனு எழுதித் தருவதாக அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர மாவட்ட செயலாளர் பார்த்திபன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சேர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து பொது மக்களுக்கு இலவசமாக தாங்கள் மனு எழுதி கொடுக்கப் போகிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். இதனை அறிந்த சேலம் நகர காவல் துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு இலவசமாக அரசே ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கின்றனர். இதனால் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அரசே மனு எழுதிக் கொடுப்பதாக இருந்தால் தாங்கள் திரும்பி செல்கிறோம் என தெரிவித்து திரும்பி சென்றனர்.

தமிழக வெற்றி கழகத்தினர் வருகை புரிந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் மனு எழுதுவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தினர் இலவசமாக தாங்கள் எழுதித் தருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு பொது மக்கள் மனுவை அதிக விலை கொடுத்து எழுதி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக மக்கள் சிரமம் இன்றி இலவசமாக மனுவை எழுதி தருவதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டும். அதன்படி, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இலவச மனு எழுதி தருவதற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணம் இன்றி பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து நாங்கள் கலைந்து செல்கிறோம். பொதுமக்களுக்கு கட்டணம் இன்றி மனு எழுதுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தினால் உடனடியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் மீண்டும் இலவச மனு எழுதி தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Embed widget