மேலும் அறிய

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

முதல்வர் கர்நாடகா வனத்துறையால் சுடப்பட்டு உயிரிழந்த என அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது சுடப்பட்டதற்கான தடையம் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரிநீர் பிடிப்பு பகுதியான பாலாறு கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்று நான்கிற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாலாற்றில் மீன்பிடித்து உள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி சென்றுவிட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த ராஜாவை காணவில்லை என்பதால் கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்று ஆற்றங்கரையில் தேடினர். மேலும் பாலாறு ஆற்றங்கரையில் இருந்த பரிசல்களையும்,வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

இந்த நிலையில் நேற்று காலை காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான அடி பாலாறு காவிரி ஆறு பகுதியில் மிதந்து வந்தது. இதனை தமிழ்நாடு காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார் என்பது குறித்து தகவல் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் மண்டல வன அலுவலர் சம்பத் படேல் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜா உள்ளிட்ட நான்கு பேர் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவில் அடிபாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றார்கள் என்றும், அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கர்நாடகா காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மீன் பிடிக்க சென்றவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் உடலில் சுடப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை... உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு!

உயிரிழந்த மீனவர் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர். மேலும் கர்நாடக வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் ராஜாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்றப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு அவர்கள் தரப்பிலிருந்து ஒரு மருத்துவர் மற்றும் வீடியோபதிவு செய்ய ஒரு நபரை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் மாலை வரை பிரேத பரிசோதனை நடத்தப்படாமல் இருந்தது. அதேசமயம் உயிரிழந்த ராஜாவின் மனைவி சகோதரர் தாய் மற்றும் உறவினர்களிடம் சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி தலைமையில் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு எந்தவித தடையமும் இல்லை என தகவல் வெளியாகியது. உடனடியாக ராஜாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கர்நாடகா வனத்துறையால் சுடப்பட்டு உயிரிழந்த என அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது சுடப்பட்டதற்கான தடையும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுப்பினர். முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget