மேலும் அறிய

தருமபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.

தருமபுரி மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தருமபுரி மின் பகிர்மான வட்டம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டத்திற்கு சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஜீவன் தலைமை வகித்தார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை ஒப்பந்தம் விடும் முறையில் ஆட்கள் எடுப்பதை கைவிட வேண்டும். மேலும் மறுபகிர்வு முறையில் பணிகளை வழங்க வேண்டும். மேலும் மின்வாரிய பணியாளர்களின் பணிப்படியை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மின் வாரிய ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 

 
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தருமபுரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
 
தருமபுாி அடுத்த நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக மற்றும் பாமக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அறிக்கை முதலில் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டுகளில் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவித்தனர். அப்பொழுது குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 1 கோடியே 74 லட்சம் நிதியை பாரபட்சமின்றி அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் முறையாக வழங்கிட வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அப்பொழுது நிதி ஒதுக்குவது குறித்து கவுன்சிலர்கள் சிலர் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர். அப்பொழுது  ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் உரிய பதில் சொல்லாததால், ஆத்திரமடைந்த, தி.மு.க பெண் ஒன்றியக்குழு துணைத் தலைவர் உள்ளிட்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள், தே.மு.தி.க மற்றும் சுயோட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் என 7 பெண்கள் உட்பட 9 கவுன்சிலர்கள், நல்லம்பள்ளியில் இன்று நடந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து, வெளிநடப்பு செய்து, அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு தலைவர், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கி தருவதாக, வாக்குறுதி கொடுத்தனர். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் மோராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget