மேலும் அறிய

Red Chilli Price: உச்சம் தொட்ட மிளகாய் விலை; கடந்த ஆண்டை விட 10-15% மளிகை பொருட்களின் விலை உயர்வு

ராம்நாடு மிளகாய் அதிகபட்சமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தினசரி சந்தைகள் இயங்கி வருகின்றது. இங்கு விற்பனைக்காக சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வர மிளகாய் என்று கூறப்படும் வத்தல் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்து சாக்கு மூட்டைகளில் வைத்து லாரிகள் மற்றும் இரயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர், இவற்றை கடை உரிமையாளர்கள் சில்லரை விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் முதல் ரக மிளகாய் வத்தல்களில் ஒன்றான சிறிய அளவில் இருக்கும் வத்தல் விலை தற்போது உயர்ந்துள்ளது. இந்த வத்தல் காரம் அதிகமாக இருக்கும். மிளகாய் வரத்து முழுமையாக குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்ற இந்த வத்தல் தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குள் 150 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அதிகபட்சமாக கிலோ 110 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த மிளகாய் வத்தல் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது, கிலோ 300 ரூபாயாக இரட்டிப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராம்நாடு மிளகாய் அதிகபட்சமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Red Chilli Price: உச்சம் தொட்ட மிளகாய் விலை; கடந்த ஆண்டை விட 10-15% மளிகை பொருட்களின் விலை உயர்வு

இது மட்டுமில்லாமல் அத்தியாவசிய தேவைகளான சீரகம், சோம்பு, மல்லி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் 50 ரூபாய் வரை கூடுதலாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று மொத்த விலை வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வு, மிளகாய் உற்பத்தி குறைவு காரணங்களினால் ஓரிரு மாதங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது மிகவும் கவலையளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நடுத்தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Red Chilli Price: உச்சம் தொட்ட மிளகாய் விலை; கடந்த ஆண்டை விட 10-15% மளிகை பொருட்களின் விலை உயர்வு

இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை வியாபாரிகள் கூறுகையில், "ஆண்டு தோறும் மார்ச் முதல் வாரத்தில் புது மளிகைப் பொருட்களின் வரத்து தொடங்கும். நடப்பாண்டு முதலாவதாக குண்டூர், நெல்லூர், கொளத்தூர், விளாத்திக்குளம், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மிளகாய் வரத்து தொடங்கியுள்ளது. வட மாநிலங்களில் கடந்தாண்டு நல்லமுறையில் பருவமழை பெய்ததால், விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. அதே போல் தமிழகத்திலும் தானியங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, புது மளிகைப் பொருட்களின் வரத்து 80 சதவீதம் உள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக மளிகைப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அதேபோல் கடந்தாண்டை விட நடப்பாண்டு ஒரு சில மளிகைப்பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget