மேலும் அறிய

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்

கட்டிட வேலை பணிகள் முடிந்த நிலையில் 15-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் ஊதியம் தராமல் விரட்டியதாக குற்றச்சாட்டு.

தமிழகம் முழுவதும் வட மாநில தொழிலாளிகளை அடித்து துன்புறுத்துவதாக வதந்திகள் பரவி வருவதாக தமிழக அரசு கூறி வந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் 20 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்திற்கு வருகை தந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய வீடுகளில் மரம் தொடர்பான வேலைகள், டைல்ஸ் வேலை உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்ற இன்ஜினியர் சேலம் மாநகர் பள்ளப்பட்டி மற்றும் வீராணம் பகுதிகளில் புதிய வீடு கட்டுமான பணிகளுக்கு, வட மாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர். 

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்

இந்த நிலையில் வீட்டின் வேலைகள் முடிந்தவுடன் பணத்தை தரும்படி வடமாநில தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்து வட மாநிலத்தவர்களை ஊருக்குள் விட்டதே தவறு என்று கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் அடித்துகொலை செய்து புதைத்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வினோத் குமார், ராஜேஷ் குமார் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர். தாங்கள் செய்த பணிகளுக்கு தரவேண்டிய ஊதிய தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் தராமல் கொலை மிரட்டல் - வடமாநில தொழிலாளர்கள் புகார்

இதுகுறித்து வட மாநில இளைஞர் ராஜேஷ் குமார் கூறுகையில், "கட்டிட வேலை முடித்த பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் பணம் கேட்டபோது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உனக்கு முழுமையாக பணம் தர முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் பொய் சொல்லு, ஆனால் பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். இது மட்டும் இன்றி என்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணத்தை கேட்டால் ஆட்களை வைத்து அடிக்கின்றனர். 20 பேரை வைத்து ஆறு மாதமாக வேலை செய்த எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். கட்டிட வேலை முழுமையாக முடிவடைந்து அவர்கள் குடியேறி உள்ள நிலையில் தங்களை இவ்வாறு மிரட்டுகின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை பெற்று தர வேண்டும்"  என கோரிக்கை வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget