Yercaud Ropecar: ஏற்காட்டில் விரைவில் ரோப் கார்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
சேலம் மாவட்டம் ஏற்காடு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கண்டு ரசிக்க ரோப் கார் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சுற்றுலா துறைக்கான மானிய கோரிக்கை மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதனை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார். குறிப்பாக, சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில், சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அதில், சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கண்டு ரசிக்க ரோப் கார் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையில் மானிய கோரிக்கையில் ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த திட்டத்தினை விரைந்து முடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோன்று ஏற்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பலமுறை ஆய்வு மட்டுமே செய்யப்பட்டு வருவதால் அதையும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோன்று, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி சுற்றுலா தலங்களை மேம்படுத்த தல 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துமிடம், பூங்கா, உணவு கூடங்கள், நடைபாதை மற்றும் தகவல் மையங்கள் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்படும் என கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி, கோமுகி அணை, மணிமுத்த அணை மற்றும் சேலம் மாவட்டம் கருமந்துறை பழப்பண்ணை ஏரி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து தல ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் அமராவதி அணை, கோயமுத்தூர் ஆழியார் அணை, ஈரோடு பவானிசாகர் அணை, சேலம் மேட்டூர் அணை, கிருஷ்ணகிரி அணை மற்றும் தேனி வைகை அணை ஆகிய இடங்களில் சிறப்பு சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்த தலா ரூபாய் இரண்டு கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

