MetturDam : மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது! ஒகேனக்கல்லில் 16வது நாளாக நீடிக்கும் தடை: காரணம் என்ன?
காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35,250 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30,250 கனஅடியாக குறைந்தது.

சேலம்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 29ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து பாசனத்துக்கும், உபரியாகவும், காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணையால் இருந்து நீர் வெளியேற்றம் ஆனது அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35,250 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 30,250 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 9 மணிக்கு விநாடிக்கு 35,000 கனஅடியிலிருந்து 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 9-ம் தேதி காலை விநாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து 10-ம் தேதி மதியம் 2 மணியளவில் 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று காலை நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக பதிவானது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 28,000 கன அடியாக நீடிப்பு - 16 வது நாளாக குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 28,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. 16 வது நாளாக குளிக்க, பரிசல் சவாரிக்கு தடை தொடர்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும், 28,000 கன அடியாகவே வந்தது. இதனால், மெயின்அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தொடர்ந்து, 17 வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்டத்தின் தடை தொடர்கிறது.





















