மேலும் அறிய

Salem District Divided: மூன்றாக பிரிக்கப்படும் சேலம் மாவட்டம்? எம்எல்ஏ வைத்த கோரிக்கை... அரசு பரிசீலனை

நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் சட்டப்பேரவையில் கோரிக்கையை வைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் திமுக ஆட்சி அமைந்த உடன் அந்த திட்டமானது கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் சேலம் மாவட்டத்தை பிரிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி சட்டப்பேரவையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் இது குறித்து பேசி உள்ளார். அதில், சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் 11 தொகுதிகளை கொண்ட பெரிய மாவட்டம் உள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். குறிப்பாக, மேட்டூர் தலைமை இடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், ஆத்தூரை மையமாக கொண்டு மற்றொரு மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பிளான்: 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த ஊரான எடப்பாடியை தலைமையாகக் கொண்டு சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், நங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து எடப்பாடி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முந்தைய ஆட்சிக்காலத்தில் எடப்பாடி சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டால், பல்வேறு பொருளாதார பாதிப்புகள் சேலம் மாவட்டத்திற்கு ஏற்படும் நிலை இருந்தது. குறிப்பாக, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, சங்ககிரி கோட்டை, சேலம் விமான நிலையம், சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி போன்றவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வணிகத்தைப் பொருத்தவரை மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஓமலூர் பகுதியில் உள்ள கைத்தறி பட்டு நிறுவனங்கள், சங்ககிரியில் உள்ள லாரி உதிரி பாகங்கள், கரும்பு மற்றும் தக்காளி விவசாயம் என பல வணிகம் சார்ந்தவை எடப்பாடி மாவட்டத்திற்கு கொடுக்கப்படும் நிலை இருந்தது. 

ஆத்தூர் தனி மாவட்டம்:

ஆனால், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து ஆத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஆத்தூர் மாவட்டத்தில் ஏற்காடு, கெங்கவல்லி, வாழப்பாடி, ராசிபுரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓரிரு தொகுதிகள் சேர்க்கப்படும் நிலை உருவாகும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காடு, ஆத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் என பல விவசாயத் தொழில்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இணைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

மக்கள் கருத்து:

ஆத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதில் சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவு பாதிப்பு இல்லை. இருப்பினும் ஒரு மாவட்டத்திற்கு தேவையான வாக்காளர்கள் ஆத்தூர் மாவட்டத்தில் இல்லை. எனவே சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டமாக சேலம் சிறந்து விளங்கி வருகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் இரண்டாக, மூன்றாவது பிரிக்கும் நடவடிக்கையை அரசு கையில் எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட பொது மக்கள் கூறுகின்றனர்.

அரசு விளக்கம்:

கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் அரசு தரப்பில் சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் இதுவரை தமிழக அரசிடம் இல்லை என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
’’மேகதாது அணையால் தமிழ்நாடே பாலைவனமாகும்; இதெல்லாம் நடந்துடும்’’ அன்புமணி கடும் எச்சரிக்கை
’’மேகதாது அணையால் தமிழ்நாடே பாலைவனமாகும்; இதெல்லாம் நடந்துடும்’’ அன்புமணி கடும் எச்சரிக்கை
“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்
“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
Embed widget