மேலும் அறிய

சேலம்: மிக்சர் சாப்பிட்டு, கண்களை துணியால் கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

சேலம் மாநகர் முழுவதும் நடைபெறும் கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் கஞ்சா, குட்கா உட்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர் பகுதிகளில் முறைகேடாக மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்க வலியுறுத்தி பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து சேலம் மாாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு முறைகேடாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக வீடியோ எடுக்கப்பட்டபோது செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் கோவிந்தன் என்பவர் அமைச்சர் வரை கமிஷன் தொகை செல்வதாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதனை அடுத்து தலைமை காவலரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் முறைகேடாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் வரை கமிஷன் போகிறது என்று கூறிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சேலம் மாநகர் முழுவதும் நடைபெறும் கள்ளத்தனமான மது விற்பனை மற்றும் கஞ்சா, குட்கா உட்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிக்சர் சாப்பிட்டும் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டும் நூதன முறையில் போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்: மிக்சர் சாப்பிட்டு, கண்களை துணியால் கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

இதேபோன்று புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

சேலம்: மிக்சர் சாப்பிட்டு, கண்களை துணியால் கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என்று கூறியும், பெரியார் அண்ணா உள்ளிட்ட திராவிட தலைவர்களின் பெயரை தவிர்த்தும் உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த பொழுது சட்டமன்றத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் ஆளுநரை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மாநகர பொது செயலாளர் ராஜகணபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதே போல சேலம் ஜங்ஷன் தபால் நிலையம் தாதகாப்பட்டி இரும்பாலை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Embed widget