மேலும் அறிய

Salem Central Jail: ஜெயிலில் தற்கொலைக்கு முயன்ற கைதி; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறைவாசிகள்

தற்கொலைகளை முன்கூட்டியே தடுக்க, "வாழ்க்கை பாலம்" என்ற பெயரில் சிறையில் மனஇயல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு சிறப்பு திட்டம்.

சேலம் மாநகர அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சேலம் மத்திய சிறைச்சாலையில் தற்கொலைகளை முன்கூட்டியே தடுக்க, "வாழ்க்கை பாலம்" என்ற பெயரில் சிறையில் மனஇயல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு சிறப்பு திட்டம் கடந்த ஒரு மாதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மத்திய சிறையில் நன்னடத்தை சிறைவாசிகளை கண்டறிந்து அவர்களுக்கு, சிறை மனஇயல் நிபுணர், மன நல ஆலோசகர்கள் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் மூலம் தற்கொலை தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறையில் சிறைவாசிகளின் தற்கொலைகளை தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம், மன பதற்றம் போன்ற மன நோயினால் பாதிக்கப்பட்ட 50 சிறைவாசிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளுக்கு தினந்தோறும் காலை யோகா பயிற்சி, மன நல ஆலோசனைகள் மற்றும் மன நல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Salem Central Jail: ஜெயிலில் தற்கொலைக்கு முயன்ற கைதி; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறைவாசிகள்

இந்த நிலையில் கடந்த வாரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை சிறைவாசி பழனிச்சாமி என்பவர் மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் மனநல சிகிச்சை மேற்கொள்ளும் சிறைவாசிகள் உள்ள ஒன்றாவது தொகுதியில் அனுமதிக்கப்பட்டார். திடீரென தூங்குவதாக சக சிறைவாசிகளிடம் சொல்லிவிட்டு படுத்திருந்த சிறைவாசி பழனிச்சாமி திடீரென அடைப்பு கதவிலேயே, தான் அணிந்திருந்த சட்டையின் உதவியால் தூக்கிட முயற்சி மேற்கொண்டார். இதனை நன்கு கவனித்த இரண்டாம் நிலை காவலர் நவீன் குமார் உடனடியாக சாவியால் அறையை திறப்பதற்குள் சிறைவாசி தற்கொலை முயற்சியை தீவிரபடுத்தினார். இந்த நிலையில் அதே சிறையறையில் இருந்த மூன்று சிறைவாசிகள் காவலருடன் இணைந்து துரிதமாக தற்கொலையை தடுத்தனர்.

Salem Central Jail: ஜெயிலில் தற்கொலைக்கு முயன்ற கைதி; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிறைவாசிகள்

மேலும் வாழ்க்கை பாலம் என்ற தற்கொலை தடுப்பு திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றதால் இந்த தற்கொலை தடுத்ததாக அந்த மூன்று சிறைவாசிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மத்திய சிறை கூடுதல் சிறை கண்காணிப்பாளர் வினோத் குமார் மூன்று சிறைவாசிகளுக்கும் ஊக்குவிக்கும் விதமாக இனிப்புகளை வழங்கினார். ஆயுள் தண்டனை சிறைவாசி பழனிச்சாமி என்பவரின் தற்கொலையை தடுக்க துரிதமாக செயல்பட்ட விசாரணை சிறைவாசிகள் கோகுல் நாதன், பால முருகன், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மனநோயினால் பாதிக்கப்பட்டு ஆலோசனை மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து வாழ்க்கை பாலம் என்ற சிறை நல தற்கொலை தடுப்பு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget